December 5, 2025, 2:31 PM
26.9 C
Chennai

IPL 2024: கொல்கத்தாவை பந்து வீச்சில் சாய்த்த சென்னை!

ipl 2024 - 2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதினெட்டாம் நாள்:

ஐபிஎல் 2024 – – சென்னை

கொல்கொத்தா நைட் ரைடர் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கொத்தா அணியை (137/9, ஷ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27, ரகுவன்ஷி 24, துஷார் தேஷ்பாண்டே 3/33, ஜதேஜா 3/18) சென்னை அணி (17.4 ஓவரில் 141/3 ருதுராஜ் கெய்க்வாட் 67*, ஷிவம் துபே 28, மிட்சல் 25, ரச்சின் ரவீந்த்ரா 15, வைபவ் அரோரா 2/28, சுனில் நரேன் 1/30) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சென்ற ஆட்டத்தில் 272 ரன் அடித்த அணியா இது? என நினைக்கத்தூண்டும் வகையில் அவர்களின் ஆட்டம் இருந்தது. பில் சால்ட் முதல் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆனார். பவர்ப்ளே முடிவில் (அதாவது 6.1ஆவது ஓவரில்) அங்கிருஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 24 ரன் அடித்து ஆட்டம் இழந்தார். சுனில் நரேன் 20 பந்துகளில் 27 ரன் அடித்து 6.5ஆவது ஓவரில் அவுட்டானார்.

அதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் (3 ரன்), ரமன்தீப் சிங் (13 ரன்), ரிங்கு சிங் (9 ரன்), ஆண்ட்ரூ ரசல் (10 ரன்) ஸ்டார்க் (பூஜ்யம்) ஆகியோர் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 19.1 ஓவர் வரை ஆடியும் அதிரடியாக ஆட முடியவில்லை. அவர் 32 பந்துகளில் 34 ரன் எடுத்தார். இவ்வாறு தட்டுத்தடுமாறி 20 ஓவரில் கொல்கொத்தா அணி 9 விக்கட் இழப்பிற்கு 137 ரன் எடுத்தது. ரவீந்தர் ஜதேஜா மிகச் சிறப்பாக பந்துவீசினார் (4 ஓவர், 18 ரன், 3 விக்கட்). 

138 ரன் என்ற சுலபமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 3.2ஆவது ஓவரில் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் அணித்தலைவருமான ருதுராஜ் கெய்க்வாட் இறுதி வரை ஆடி 67 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்சல் 19 பந்துகளில் 25 ரன்னும் ஷிவம் துபே 18 பந்துகளில் 28 ரன்னும் அடித்தனர்.

தோனி கடைசி 3 பந்துகளுக்காக மைதானத்திற்கு பேட்டிங் செய்ய வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் எவரும் சொல்லிக்கொள்ளும்படி பந்துவீசவில்லை.   

அணியின் ரவீந்த்ர ஜதேஜா தன்னுடைய சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories