IPL 2024: பஞ்சாப் அணி வெற்றி; ஆனாலும் பலனில்லை!

ipl 2024 - 2026

56ம் நாள்: ஐபிஎல் 2024 – 15.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இன்று கௌஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

ராஜஸ்தான் அணியை (144/9. ரியான் பராக் 48, அஷ்வின் 28, டாம் கோலர் காட்மோர் 18, சஞ்சு சாம்சன் 18, போல்ட் 12, சாம் கரண் 2/24, ஹர்ஷல் படேல் 2/28, ராஹுல் சாஹர் 2/26) பஞ்சாப் அணி (18.5 ஓவரில் 145/5, சாம் கரன் 63, ஜிதேஷ் ஷர்மா 22, ரிலீ ரோஸ்கோ 22, ஜானி பெயிர்ஸ்டோ 14, ஆவேஷ் கான் 2/28, சாஹல் 2/31) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 ரன்) இன்றும் ஜொலிக்கவில்லை. முதல் ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் டாம் கோலர் காட்மோர் (18 ரன்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (15 பந்துகளில் 18 ரன்) நிலைத்து ஆடவில்லை.

இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ரியன் பராக் (34 பந்துகளில் 48 ரன், 6 ஃபோர்) மற்றும் அஷ்வின் (19 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இவகளுக்குப் பிறகு ஆடவந்த துருவ் ஜுரல் (பூஜ்யம் ரன்), ரோவ்மன் போவல் (4 ரன்), டொன்னொவன் ஃபெரேரா (7 ரன்), போல்ட் (12 ர்ன), ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 3 ரன்) ஆகியோர் சரிவர விளையாடாததால் ராஜஸ்தான் அணி 20ஆவது ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாகப் பந்துவீசினர்.

145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியின் வீரர்கள்  4.5ஆவது ஓவருக்குள் பிரப்சிம்ரன் சிங் (6 ரன்), ஜானி பெயர்ஸ்டோ (14 ரன்), ரிலீரோஸ்கோ (22 ரன்), ஷஷாங்க் சிங் (பூஜ்யம் ரன்) என வரிசையாக சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 8 ஓவர் முடிவில் 4/48.

அதன் பின்னர் அணித்தலைவர் சாம்கரன் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஜித்தேஷ் ஷர்மா (20 பந்துகளில் 22 ரன்) இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். கடைசியாக அஷுத்தோஷ் ஷர்மா (11 பந்துகளில் 17 ரன்) சாம் ரனுடன் இணைந்து ஆடி அணிக்கு வெற்றியத் தேடித்தந்தார்.

பஞ்சாப் அணி 18.5 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுத்து 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. 

இன்றைய வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் நிலையில் மாற்றமில்லை; அது 16 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலேயே உள்ளது. 

பஞ்சாப் அணியின் அணித்தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சாம் கரண் தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

15.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1393191.428
ராஜஸ்தான் 1385160.273
சென்னை1376140.528
ஹைதராபாத்1275140.406
டெல்லி147714-0.377
பெங்களூரு1367120.387
லக்னோ136712-0.787
குஜராத்135711-1.063
பஞ்சாப்135810-0.347
மும்பை13498-0.271

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories