May 12, 2025, 5:38 PM
35 C
Chennai

பாராலிம்பிக்: பெரும் முன்னேற்றம் கண்ட  இந்திய அணி! 

#image_title

பாரீஸில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியினர் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். கடந்த பாராலிம்பிக் போட்டிகளை விட அதிக  அளவில் 7 தங்கம் உட்பட 29 பதக்கங்களைப் பெற்று, 20 நாடுகளைக் கொண்ட முதல் பட்டியலிலும் இடம்பிடித்து முதல்முறையாக சாதித்துள்ளனர். அவர்களுக்கு நாடு முழுதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28ல் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இதில் 168 நாடுகளைச் சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றார்கள். இந்தியத் தரப்பில் இருந்து 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றார்கள்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று, தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ஜூடோ என 5 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, மொத்தம் 29 பதக்கங்களைப் பெற்றார்கள். இவற்றில், தடகளத்தில் மட்டும் 17 பதக்கங்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாரிஸில் அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் 6 பதக்கங்களையே பெற்று ஏமாற்றம் அடைந்த இந்திய அணியினர், பட்டியல்ல்  71வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதற்கு ஆறுதல் அளிப்பது போல், பாராலிம்பிக் போட்டிகளில் அசத்தி,  இந்திய அணியினர் 18வது இடத்தைப் பிடித்தனர்.  ‘டாப்-20’ பட்டியலில் இடம் பெற்றதன் மூலம் இந்திய அணியினர் தாங்களும் சாதனையாளர்களே என்று இனம் காட்டினர்.  கடந்த 2016ல் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் 4 பதக்கம், 2021ல் நடைபெற்ற  டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 19 பதக்கம்  என முன்னேற்றம் கண்டு, இப்போது 29 பதக்கங்கள் என நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். 

இந்த பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல புதிய சாதனைகளையும் படைத்தனர். தடகளத்தில் பிரீத்தி பால் (100, 200 மீ., ஓட்டம்), உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் ஆகியோர் வெண்கல பதக்கங்களைப் பெற்றனர். இவர்களில் மாரியப்பன் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். ஹர்விந்தர் சிங் (வில்வித்தை), தரம்பிர் (கிளப் த்ரோ), ஷீத்தல் தேவி (வில்வித்தை), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), அவனி (துப்பாக்கி சுடுதல்), கபில் பார்மர் (ஜூடோ) ஆகியோர் பதக்கங்களை வென்று சாதித்தனர்.  

ALSO READ:  காலமானார் மூத்த தேசபக்தர் குமரி அனந்தன்! தலைவர்கள் இரங்கல்!

பாராலிம்பிக்கில் 1968 முதல் 2021 வரை இந்தியா (9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம்) மொத்தம் 31 பதக்கம் வென்றது. இம்முறை பாரிசில் மட்டும் 29 பதக்கங்கள் கிடைத்தன. பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு தடகளத்தில் 4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்களும், பாட்மின்டனில் 5, துப்பாக்கி சுடுதலில் 4, வில்வித்தையில் 2, ஜூடோவில் ஒரு பதக்கம் என மொத்தம் 29 பதக்கங்கள் கிடைத்தன.

இந்நிலையில் 12 நாட்கள் நடைபெற்ற பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவுற்றூ, நேற்று இதன் நிறைவு விழா நடைபெற்றது. பாரிசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை ஹர்விந்தர் சிங், பிரீத்தி பால் ஏந்தி வந்தார்கள். கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

Topics

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

சீன ஏவுகணைகள், துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தியது பாகிஸ்தான்: உறுதி செய்த இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்ரா பௌர்ணமி விழா; வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக

Entertainment News

Popular Categories