Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

eng vs ind t20 2025 - 2026

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

போட்டியை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணியை (20 ஓவர்களில் 132 ரன், ஜாஸ் பட்லர் 68, ஹாரி ப்ரூக் 17, வருண் சக்கரவர்த்தி 3/23, அர்ஷதீப் சிங், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கட்) இந்திய அணி (12.5 ஓவர்களில் 133/3, அபிஷேக் ஷர்மா 79, சஞ்சு சாம்சன் 26, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 19, ஹார்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 3, ஆர்ச்சர் 2/21, அதில் ரஷீத் 1/27) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விக்கட் கீப்பராக இடம்பெறுவதால், துருவ் ஜுரல் விளையாடவில்லை; முகம்மது ஷமி, வாஷிங்க்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோரும் விளையாடவில்லை. அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மட்டையாளர்கள்; ஹார்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா இருவரும் பந்துவீசும் ஆல்ரவுண்டர்கள்; ரிங்கு சிங் இறுதியில் அடித்து ஆடும் ஒரு ஆட்டக்காரர்; அர்ஷதீப் வேகப்பந்து வீச்சாளர்; வருண், அக்சர், பிஷ்னோய் மூவரும் சுழல் பந்து வீச்சாளர்கள்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (பூஜ்யம் ரன்) மற்றும் பென் டக்கட் (4 ரன்) இருவரும் அர்ஷதீப் பந்து வீச்சில் மூன்று ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜாஸ் பட்லர் (44 பந்துகளில் 68 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) ஹாரி ப்ரூக் (14 பந்துகளில் 17 ரன்) இருவரும் வேகமாகவே ரன் சேர்த்தனர். எட்டாவடு ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஹாரி ப்ரூக்கும் லியன் லிவிங்க்ஸ்டோனும் ஆட்டமிழந்தனர். ஆட்டம் இந்திய அணியின் கைகளில் வந்தது. அதன் பின்னர் இந்திய அணிக்கு ஏறுமுகம்ந்தான். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 132 ரன் எடுத்திருந்தது.

          133 என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி அதிக கஷ்டப்படவில்லை. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தபோதும் 20 பந்துகளில் 26 ரன் அடித்து அணியை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார். அதன்பின்னர் அபிஷேக ஷர்மா (34 பந்துகளில் 79 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) அதிரடியாக ஆடினார். திலக் வர்மா (16 பந்துகளில் 19 ரன்) அவருக்குத் துணை நின்றார். 12.5 ஓவரில் 133 ரன் அடித்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரை வெற்றியுடன் தொடங்கி 1-0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

          அடுத்த ஆட்டம் சென்னையில் 25ஆம் தேதி நடைபெற உள்ளது,   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories