December 6, 2025, 9:11 AM
26.8 C
Chennai

தந்தை கொல்லப் படுவார் என்பது முன்னமே தெரியும்!: ராகுல் ஓபன் டாக்!

rahul gandhi iim singapore - 2025

சிங்கப்பூர்:

எனது தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்படுவார் என்பது முன்னமே தெரியும்; அவரைக் கொன்றவர்களை நான் முழுமையாக மன்னித்துவிட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

5 நாள் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார் ராகுல் காந்தி. இங்கே ஐஐஎம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், ‘ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா?’ என மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “மனித வெடிகுண்டு மூலம், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர், நானும் பிரியங்காவும் கடுமையான துயரத்தில் இருந்தோம். பல ஆண்டுகள் ராஜீவ் கொலையாளிகளின் மீது ஆவேசத்தில் இருந்தோம். ஆனால், இப்போது அவர்களை முழுமையாக மன்னித்து விட்டோம்” என்றார்.

“அரசியலில் நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு துணை நின்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள். அதன் அடிப்படையில் தான் எனது பாட்டியும், தந்தையும் கொல்லப்பட்டார்கள். எங்கள் பாட்டியும், தந்தையும் கொல்லப்படுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனது பாட்டி என்னிடம், தான் என்றாவது ஒருநாள் கொல்லப்படுவேன் என்று கூறியிருந்தார். அந்த அடிப்படையில்தான் நானும் என் தந்தையிடம், ‘நீங்களும் ஒருநாள் கொல்லப்படுவீர்கள் என்றேன்’ என்று ராகுல் வேதனையுடன் கூறினார்.

முன்னாள் பிரதம மந்திரிகளின் மகன் மற்றும் பேரன் என்ற ஒரு சிறப்புரிமையை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்களா எனக் கேட்டபோது, “நீங்கள் நாணயத்தின் எந்தப் பக்கத்தை சார்ந்து இருக்கிறீர்கள் … நிச்சயமாக நான் சில சிறப்புரிமைகளைக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் இவ்வாறு வந்ததை ஒரு கடினமான சவாரி மூலம் இல்லை என்று மட்டும் சொல்ல முடியாது.”

“என் பாட்டி படுகொலை செய்யப்பட்டபோது எனக்கு 14 வயது. என் பாட்டியைக் கொன்றவர்களுடன் நான் பேட்மின்டன் விளையாடியிருக்கிறேன். அதன் பிறகு என் தந்தை கொல்லப்பட்டார். எனவே ஒரு குறிப்பிட்ட கடினமான சூழலில் வாழ்ந்தேன் … இரவு பகல் பாராமல், ஒரு 15 பேருடனேயே நாளைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டேன். ” என்று கூறியுள்ளார். அவரது பேச்சு, காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியால் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories