தந்தை கொல்லப் படுவார் என்பது முன்னமே தெரியும்!: ராகுல் ஓபன் டாக்!

rahul gandhi iim singapore - 2026

சிங்கப்பூர்:

எனது தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்படுவார் என்பது முன்னமே தெரியும்; அவரைக் கொன்றவர்களை நான் முழுமையாக மன்னித்துவிட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

5 நாள் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார் ராகுல் காந்தி. இங்கே ஐஐஎம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், ‘ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா?’ என மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “மனித வெடிகுண்டு மூலம், ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர், நானும் பிரியங்காவும் கடுமையான துயரத்தில் இருந்தோம். பல ஆண்டுகள் ராஜீவ் கொலையாளிகளின் மீது ஆவேசத்தில் இருந்தோம். ஆனால், இப்போது அவர்களை முழுமையாக மன்னித்து விட்டோம்” என்றார்.

“அரசியலில் நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு துணை நின்றால், நீங்கள் கொல்லப்படுவீர்கள். அதன் அடிப்படையில் தான் எனது பாட்டியும், தந்தையும் கொல்லப்பட்டார்கள். எங்கள் பாட்டியும், தந்தையும் கொல்லப்படுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனது பாட்டி என்னிடம், தான் என்றாவது ஒருநாள் கொல்லப்படுவேன் என்று கூறியிருந்தார். அந்த அடிப்படையில்தான் நானும் என் தந்தையிடம், ‘நீங்களும் ஒருநாள் கொல்லப்படுவீர்கள் என்றேன்’ என்று ராகுல் வேதனையுடன் கூறினார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

முன்னாள் பிரதம மந்திரிகளின் மகன் மற்றும் பேரன் என்ற ஒரு சிறப்புரிமையை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்களா எனக் கேட்டபோது, “நீங்கள் நாணயத்தின் எந்தப் பக்கத்தை சார்ந்து இருக்கிறீர்கள் … நிச்சயமாக நான் சில சிறப்புரிமைகளைக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் இவ்வாறு வந்ததை ஒரு கடினமான சவாரி மூலம் இல்லை என்று மட்டும் சொல்ல முடியாது.”

“என் பாட்டி படுகொலை செய்யப்பட்டபோது எனக்கு 14 வயது. என் பாட்டியைக் கொன்றவர்களுடன் நான் பேட்மின்டன் விளையாடியிருக்கிறேன். அதன் பிறகு என் தந்தை கொல்லப்பட்டார். எனவே ஒரு குறிப்பிட்ட கடினமான சூழலில் வாழ்ந்தேன் … இரவு பகல் பாராமல், ஒரு 15 பேருடனேயே நாளைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டேன். ” என்று கூறியுள்ளார். அவரது பேச்சு, காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியால் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பலரும் பார்த்து வருகின்றனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories