கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகார்: நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

KEJRIWAL புதுதில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகாரின் பேரில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தில்லியில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரவிந்த் கேஜரிவால், “தலைநகரில் உள்ள தனியார் மின் விநியோக நிறுவனங்களுடன் தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய், பொதுச் செயலர் ஆசீஷ் சூட் ஆகியோர் கூட்டு வைத்துள்ளனர்; பல்வேறு தனியார் நிறுவனங்களில் அவர்கள் ஏராளமான பங்குகளை வைத்துக் கொண்டு மத்திய அரசில் காரியம் சாதித்து வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டினார். அத்துடன், பாஜக மதவன்முறையைத் தூண்டுவதாகவும் கேஜரிவால் புகார் கூறியிருந்தார். இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தில் சதீஷ் உபாத்யாய் வியாழக்கிழமை புகார் தெரிவித்திருந்தார். இதைப் பரிசீலித்த தலைமைத் தேர்தல் ஆணையம், அரவிந்த் கேஜரிவாலுக்கு சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதில்… “சதீஷ் உபாத்யாய் அளித்துள்ள புகாரில் அவர் மீதும், ஆசீஷ் சூட் மீதும் தனிப்பட்ட முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார். எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களையோ, அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களையோ ஆதாரமின்றி விமர்சிக்கக் கூடாது. மேலும், உங்கள் பேட்டியின் போது திரிலோக்புரி, நந்த்நகரி பகுகளில் சதீஷ் உபாத்யாய் வன்முறையைத் தூண்டியதாகவும் நாங்க்லோய், பவானாவில் அதேபோன்ற வன்முறையை அவர் தூண்ட முயல்வதாகவும் கூறியுள்ளீர்கள். தில்லியில் தேவாலாயம் தாக்கப்பட்ட சம்பவத்திலும் சதீஷ் உபாத்யாய்க்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இவை அனைத்தும் சமூகத்தில் வகுப்புவாதத்தையும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது வெறுப்புணர்வையும் தூண்டும் வகையிலான செயல்பாடுகளாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, உங்கள் செயல்பாடு தொடர்பாக வரும் 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள்ளாக தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதி உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories