கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகார்: நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

KEJRIWAL புதுதில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் மீது பாஜக அளித்த புகாரின் பேரில், அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தில்லியில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரவிந்த் கேஜரிவால், “தலைநகரில் உள்ள தனியார் மின் விநியோக நிறுவனங்களுடன் தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய், பொதுச் செயலர் ஆசீஷ் சூட் ஆகியோர் கூட்டு வைத்துள்ளனர்; பல்வேறு தனியார் நிறுவனங்களில் அவர்கள் ஏராளமான பங்குகளை வைத்துக் கொண்டு மத்திய அரசில் காரியம் சாதித்து வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டினார். அத்துடன், பாஜக மதவன்முறையைத் தூண்டுவதாகவும் கேஜரிவால் புகார் கூறியிருந்தார். இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தில் சதீஷ் உபாத்யாய் வியாழக்கிழமை புகார் தெரிவித்திருந்தார். இதைப் பரிசீலித்த தலைமைத் தேர்தல் ஆணையம், அரவிந்த் கேஜரிவாலுக்கு சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதில்… “சதீஷ் உபாத்யாய் அளித்துள்ள புகாரில் அவர் மீதும், ஆசீஷ் சூட் மீதும் தனிப்பட்ட முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளார். எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களையோ, அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களையோ ஆதாரமின்றி விமர்சிக்கக் கூடாது. மேலும், உங்கள் பேட்டியின் போது திரிலோக்புரி, நந்த்நகரி பகுகளில் சதீஷ் உபாத்யாய் வன்முறையைத் தூண்டியதாகவும் நாங்க்லோய், பவானாவில் அதேபோன்ற வன்முறையை அவர் தூண்ட முயல்வதாகவும் கூறியுள்ளீர்கள். தில்லியில் தேவாலாயம் தாக்கப்பட்ட சம்பவத்திலும் சதீஷ் உபாத்யாய்க்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இவை அனைத்தும் சமூகத்தில் வகுப்புவாதத்தையும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது வெறுப்புணர்வையும் தூண்டும் வகையிலான செயல்பாடுகளாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, உங்கள் செயல்பாடு தொடர்பாக வரும் 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள்ளாக தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதி உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories