புது தில்லி சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாடு முழுவதிலும் உள்ள 2500 நகரங்களில் இலவசமாக அதிவேக வை-பை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏர்போர்ட், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் தனியார் நிறுவனங்குகள் இலவச வைஃபை சேவையை வழங்கி வருவது போன்று, 2500 நகரங்களில் இந்தச் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதை குறிப்பிட்ட நேரம் வரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்ஸவா, இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “அடுத்த நிதி ஆண்டிலிருந்து (2015-2016) நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தத் திட்டத்தை பி.எஸ்.என்.எல். மட்டுமின்றி அனைத்து நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

