புதுதில்லி தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற இந்தி வார இதழ் ஒன்றின் சிறப்பு பிரதி வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். கடல் எல்லை உருவாக்கப்படுவதில் 20 ஆண்டுகளாக போடப்பட்ட திட்டத்தில் முன்னாள் பிரதமர்கள் சிலர் விட்டுக் கொடுத்தனர். இருப்பினும் தங்கள் பெயர் எங்கும் வெளி வராமல் இருக்கும்படி அவர்கள் பார்த்துக் கொண்டனர். இது வருத்தமளிக்கிறது. அவர்கள் யார் என்பதை நான் வெளியில் கூற விரும்பவில்லை என்றார். மனோகர் பாரிக்கரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி இதுகுறித்துக் கூறுகையில், அந்த முன்னாள் பிரதமர்கள் யார் என்பதனை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் பேச்சுக்கு பாரிக்கர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.
தேசியப் பாதுகாப்பில் முன்னாள் பிரதமர்கள் கோட்டை விட்டனர்: பாரிக்கர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
Published:

