எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் முத்துக்கருப்பன்

Published:

PARLIAMENT - 2026

அ.தி.மு.க மாநிலங்களவை  உறுப்பினர் முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு அனுப்பி வைக்கிறார்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் ராஜினாமா செய்வதாக அவர் கூறினார்.

காவிரி நீர் பிரச்சனையால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தாலும், மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன்  என விளக்கம் அளித்தார்.

IMG 20180402 WA0036 - 2026

அரசியலுக்காக குடிக்க தண்ணீர்கூட கொடுக்காமல் இருக்கலாமா? என்று கேள்வி எழுப்பிய முத்துக்கருப்பன், ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டி விளக்கம் அளித்தார்.

ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப போவதில்லை என திட்டவட்டமாக அவர் கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img