“மேக் இன் இந்தியா” திட்டத்துக்காக இரு குழுக்களை அமைத்தது ஜம்மு-காஷ்மீர்

Published:

” மேக் இன் இந்தியா – இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தினை ஜம்மு-காஷமீர் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த வசதியாக, அந்த மாநிலத்தில் இரண்டு குழுக்களை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, மாநிலத் தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவும், நிதித் துறை ஆணையர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் துறையில் உள்ள சிக்கல்களைக் களைவது, இந்த திட்டத்துக்காக, மாநிலத்தின் தொழில் முதலீடுகளை பெருக்குவது, திட்டம் தொடர்பாக கண்காணிப்புக் குழு தமது கவனத்துக்கு கொண்டு வரும் விவரங்கள் தொடர்பான நடவடிக்கை உள்ளிட்டவற்றை இந்த உயர்நிலைக் குழு மேற்கொள்ளும்.

Related articles

Recent articles

spot_img