புதுதில்லி : நான்கு நாள் பயணமாக சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அவரை வரவேற்றனர்.

