December 5, 2025, 4:58 PM
27.9 C
Chennai

இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வால் எழும் சாதனைகளால் பெருமை கொள்கிறோம்! ஸ்வீடனில் மோடி!

modi sweeden - 2025

ஸ்டாக்ஹோம்: வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வால் எழும் சாதனைகளால் பெருமிதம் கொள்கிறோம் என்று பிரதமர் மோடி ஸ்வீடன் வாழ் இந்தியர்களிடம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

அரசு முறை பயணமாக ஸ்வீடன் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, ஸ்டாக்ஹோமில் ஸ்வீடன் வாழ் இந்தியர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்திய வம்சாவளி மக்களின் கடின உழைப்பை ஸ்வீடன் அங்கீகரிக்கிறது. 125 கோடி இந்தியர்கள் சார்பில் உங்களிடம் பேச வந்துள்ளேன். உங்கள் மத்தியில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், வங்காளம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் சுமார் 100 மொழிகள் உள்ளன. மொழி, பண்பாடு என தனித்தனியாக இருந்தாலும் கலாசாரத்தாலும் இந்தியர்கள் என்ற பெருமித உணர்வாலும் நாம் ஒன்றாக இணைந்திருக்கிறோம். இந்த ஒற்றுமை உணர்வால்தான் மேரி கோம், சாய்னா நேவால் போன்றோரின் சாதனைகளால் நாம் பெருமை கொள்கிறோம் என்று பேசினார் மோடி.

 

பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடைந்தார். அவரை ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் நாட்டின் மன்னர் 16ஆம் காரல் கஸ்டாபை நேற்று சந்தித்து பேசினார். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனும் இரு தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தினர். பின்னர் ஸ்வீடனில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரிட்டன் சென்றடைந்தார். அங்கே ஹீத்ரோ விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வந்து வரவேற்றார். மோடி, இன்று பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories