இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வால் எழும் சாதனைகளால் பெருமை கொள்கிறோம்! ஸ்வீடனில் மோடி!

Published:

modi sweeden - 2026

ஸ்டாக்ஹோம்: வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வால் எழும் சாதனைகளால் பெருமிதம் கொள்கிறோம் என்று பிரதமர் மோடி ஸ்வீடன் வாழ் இந்தியர்களிடம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

அரசு முறை பயணமாக ஸ்வீடன் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, ஸ்டாக்ஹோமில் ஸ்வீடன் வாழ் இந்தியர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்திய வம்சாவளி மக்களின் கடின உழைப்பை ஸ்வீடன் அங்கீகரிக்கிறது. 125 கோடி இந்தியர்கள் சார்பில் உங்களிடம் பேச வந்துள்ளேன். உங்கள் மத்தியில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், வங்காளம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் சுமார் 100 மொழிகள் உள்ளன. மொழி, பண்பாடு என தனித்தனியாக இருந்தாலும் கலாசாரத்தாலும் இந்தியர்கள் என்ற பெருமித உணர்வாலும் நாம் ஒன்றாக இணைந்திருக்கிறோம். இந்த ஒற்றுமை உணர்வால்தான் மேரி கோம், சாய்னா நேவால் போன்றோரின் சாதனைகளால் நாம் பெருமை கொள்கிறோம் என்று பேசினார் மோடி.

 

பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடைந்தார். அவரை ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் நாட்டின் மன்னர் 16ஆம் காரல் கஸ்டாபை நேற்று சந்தித்து பேசினார். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனும் இரு தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தினர். பின்னர் ஸ்வீடனில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரிட்டன் சென்றடைந்தார். அங்கே ஹீத்ரோ விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வந்து வரவேற்றார். மோடி, இன்று பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img