ஆம்புலன்ஸ் அனுப்ப தாமதம்: டாக்டருக்கு சரமாரி அடி உதை

Published:

லக்னோ:

உத்தரப் பிரதேசத்தில் நெருக்கடியான நேரத்தில், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் அரசு டாக்டரை நோயாளியின் உறவினர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் நோயாளி ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சை அழைத்தனர். மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வர தாமதமாகிவிட்டது.

இது தொடர்பாக அரசு டாக்டரிடம் நோயாளியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் மருத்துவமனை விதிமுறைகள் குறித்துகூறினார். இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் டாக்டரை சரமாரியாக தாக்கினார்கள். காலால் எட்டி உதைத்தனர். உடனே மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவந்து டாக்டரை மீட்டனர். படுகாயம் அடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதனிடையே டாக்டர் தாக்கப்படும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்த ஒருவர் அதை டாக்டரின் ‘வாட்ஸ் அப்’புக்கு அனுப்பினார். டாக்டர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தச் சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img