’காந்தி’ பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த இன்றைய ‘காந்தி’கள்

Published:

mahatma gandhi birthday meeting3 - 2026

புது தில்லி: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடும் முயற்சியில் உள்ள மத்திய அரசு, இதற்காகக் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் இன்றைய காந்திகளான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

2019 அக்டோபர் 2 முதல் 2020ஆம் ஆண்டு வரை காந்தியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப் பட்டது.

இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 23 மாநிலங்களின் முதலமைச்சர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

mahatma gandhi birthday meeting2 - 2026

ஆனால் தங்கள் பெயரில் காந்தியை வைத்துக் கொண்டுள்ள நேரு குடும்ப வாரிசுகளான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மேலும், அரசியல் காரணங்களால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img