13 மாநிலங்களுக்கு புயல், சூறாவளி, மழை எச்சரிக்கை..!

stormsmay03 - 2026

அடுத்த 2 நாட்களுக்கு 13 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் புழுதிப்புயல் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றும், நாளையும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு – தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த வாரத்தில் தாக்கிய இடி மின்னல், மழை மற்றும் சூறாவளி புழுதிப் புயலால் 124 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்த இயற்கைச் சீற்றத்தில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன .தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கின.

இத்தகைய சூறாவளிப் புயல் மீண்டும் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உத்தரகாண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கடுமையான வேகத்துடன் காற்று வீசும் என்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வடகிழக்கு மாநிலங்களில் இன்று பலத்த புழுதிப் புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் மழை காரணமாக ஹரியானா அரசு பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் வானிலை ஆய்வுத்துறையின் முன்னறிவிப்பைத் தொடர்ந்து 13 மாநிலங்களும் விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories