December 5, 2025, 6:56 PM
26.7 C
Chennai

இறக்குமதி மணலை யாரும் விற்கக் கூடாது! பொதுப்பணித் துறைக்கே உரிமை உண்டு! அரசாணை வெளியீடு!

tamil nadu secretariat tamil nadu assembly - 2025

இறக்குமதி மணலை விற்பனை செய்யும் உரிமை பொதுப்பணித் துறைக்கே உண்டு என்று புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

இறக்குமதி மணல் விவகாரத்தில் விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில், விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சிறு கனிமச் சலுகை விதிகளைத் திருத்தி வெளியிட்டுள்ள அரசாணையில், பொதுப்பணித் துறை தவிர வேறு யாருக்கும் பிற நாடுகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க உரிமை இல்லை. மணல் விற்பனை உரிமை மாநில அரசின் பொதுப்பணித்துறையிடமே இருக்கும். பொதுப்பணித் துறையின் குறிப்பீடுகளை நிறைவு செய்யாத மணலைத் தமிழகத்தில் இருந்து கடல்வழியாகவே அப்புறப்படுத்த வேண்டும்.

எவரும் இறக்குமதி மணலை அவருடைய சொந்தப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது, அல்லது வேறு மாநிலத்தில் விற்கக் கூடாது. இறக்குமதி மணலை இருப்பு வைக்கும் உரிமை பொதுப்பணித்துறையிடமே இருக்கும்.

இறக்குமதி மணல் எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். யார் மணலை இறக்குமதி செய்தாலும் அதைப் பொதுப்பணித்துறைக்கு மட்டுமே விற்க வேண்டும்.

பொதுப் பணித் துறையின் அனுமதியின்றி இறக்குமதி மணலை துறைமுகத்தில் இருந்து கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லக் கூடாது. இந்த விதிகளை மீறுவோருக்கு இரண்டாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

– என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories