கர்நாடக பேரவைத் தேர்தல் நிறைவு; கருத்துக் கணிப்புகளில் முந்திய பாஜக.,!

karnataka election modi - 2026
#image_title

224 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக., காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கர்நாடக சட்டமன்றத்துக்கான தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணியுடன் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு நிறைவடையும் நேரமான மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள், வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். முன்னதாக மாலை 5 மணி நிலவரப்படி 65.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வசதியாக 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11,617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அவற்றில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

வாக்குப் பதிவு நிறைவுற்ற நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் பாஜக., முந்தியுள்ளது. சில கருத்துக் கணிப்புகள், தொங்கு சட்டமன்றம் உருவாகும் என்று தெரிவித்துள்ளன. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, அடுத்த ஆட்சியில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று அவை தெரிவிக்கின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்

மொத்த தொகுதிகள்: 224

டி.வி.-9

பா.ஜ., 88-98
காங்., 99-109
ம.ஜ.,த., 21-26

ரிபப்ளிக் டி.வி

பா.ஜ., 85-100
காங்., 94-108
ம.ஜ.,த., 24-32
பிற கட்சிகள்: 2-6

டைம்ஸ் நவ்

பா.ஜ., 114
காங்., 86
ம.ஜ.த., 21
மற்றவை -03

ஜி.நியூஸ் மேட்ரிஸ்:

பா.ஜ., 79-94
காங்., 103-118
ம.ஜ.த., 25-33
மற்றவை: 2-5

நியூஸ் நேசன்

பா.ஜ., 114
காங்., 86
ம.ஜ.த., 21
மற்றவை:0

சவர்ணா நியூஸ் / ஜன் கி பாத்:

பா.ஜ., 94-117
காங்., 91-106
ம.ஜ.,த., 14-24
மற்றவை: 0

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories