கர்நாடக பேரவைத் தேர்தல் நிறைவு; கருத்துக் கணிப்புகளில் முந்திய பாஜக.,!

karnataka election modi - 2026
#image_title

224 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக., காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கர்நாடக சட்டமன்றத்துக்கான தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணியுடன் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு நிறைவடையும் நேரமான மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள், வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். முன்னதாக மாலை 5 மணி நிலவரப்படி 65.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வசதியாக 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11,617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அவற்றில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

வாக்குப் பதிவு நிறைவுற்ற நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் பாஜக., முந்தியுள்ளது. சில கருத்துக் கணிப்புகள், தொங்கு சட்டமன்றம் உருவாகும் என்று தெரிவித்துள்ளன. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, அடுத்த ஆட்சியில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று அவை தெரிவிக்கின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்

மொத்த தொகுதிகள்: 224

டி.வி.-9

பா.ஜ., 88-98
காங்., 99-109
ம.ஜ.,த., 21-26

ரிபப்ளிக் டி.வி

பா.ஜ., 85-100
காங்., 94-108
ம.ஜ.,த., 24-32
பிற கட்சிகள்: 2-6

டைம்ஸ் நவ்

பா.ஜ., 114
காங்., 86
ம.ஜ.த., 21
மற்றவை -03

ஜி.நியூஸ் மேட்ரிஸ்:

பா.ஜ., 79-94
காங்., 103-118
ம.ஜ.த., 25-33
மற்றவை: 2-5

நியூஸ் நேசன்

பா.ஜ., 114
காங்., 86
ம.ஜ.த., 21
மற்றவை:0

சவர்ணா நியூஸ் / ஜன் கி பாத்:

பா.ஜ., 94-117
காங்., 91-106
ம.ஜ.,த., 14-24
மற்றவை: 0

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories