February 21, 2026, 2:05 PM
30.4 C
Chennai

கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றார் எடியூரப்பா! தலைவர்கள் வாழ்த்து

yediyurappa taking oath horz - 2026

பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக இன்று காலை எடியூரப்பா பொறுப்பேற்றார். அவருக்கு முக்கியத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெற 112 இடங்கள் தேவை. ஆனால் பாஜக., வசம் 104 உறுப்பினர்களே உள்ளனர். எனவே, பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், உச்ச நீதிமன்றம் தடை இல்லை என்று கூறிய சூழலில், எடியூரப்பா மட்டும்  இன்று காலை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து 117 இடங்களைப் பெற்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் இரண்டு கட்சிகளும் இணைந்து கோரிக்கை வைத்தன.

தனிப் பெரும் கட்சி என்ற வகையில் தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு பாஜக.,வின் சார்பில் எடியூரப்பா கோரினார். இதை அடுத்து அவர் ஆட்ட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. தொடர்ந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். எடியூரப்பாவுடன் அமைச்சர்களாக யாரும் பதவி ஏற்கவில்லை. பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே அமைச்சரவை பதவியேற்கும்.

இதற்கிடையில், பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர் முன்னாள் முதல்வர் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories