December 5, 2025, 5:26 PM
27.9 C
Chennai

கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றார் எடியூரப்பா! தலைவர்கள் வாழ்த்து

yediyurappa taking oath horz - 2025

பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக இன்று காலை எடியூரப்பா பொறுப்பேற்றார். அவருக்கு முக்கியத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெற 112 இடங்கள் தேவை. ஆனால் பாஜக., வசம் 104 உறுப்பினர்களே உள்ளனர். எனவே, பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், உச்ச நீதிமன்றம் தடை இல்லை என்று கூறிய சூழலில், எடியூரப்பா மட்டும்  இன்று காலை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து 117 இடங்களைப் பெற்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் இரண்டு கட்சிகளும் இணைந்து கோரிக்கை வைத்தன.

தனிப் பெரும் கட்சி என்ற வகையில் தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு பாஜக.,வின் சார்பில் எடியூரப்பா கோரினார். இதை அடுத்து அவர் ஆட்ட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. தொடர்ந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். எடியூரப்பாவுடன் அமைச்சர்களாக யாரும் பதவி ஏற்கவில்லை. பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே அமைச்சரவை பதவியேற்கும்.

இதற்கிடையில், பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர் முன்னாள் முதல்வர் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories