February 20, 2026, 7:04 PM
29.3 C
Chennai

அர்விந்த் கேஜ்ரிவால் துணை நிலை ஆளுநர் பனிப்போர்: உள்ளிருப்புப் போராட்டமும் உடன்படா முடிவுகளும்!

aap dharna at LG office - 2026

புதுதில்லி:  கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தில்லி துணை நிலை ஆளுநர்  சந்திக்க இயலாது என்று மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

 

தில்லியில் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எவரும் சந்திப்பதில்லை என்றும், அரசு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.  இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நேற்றுமுன்தினம் மனு அளிக்கச் சென்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் சந்திக்க மறுத்துவிட்டார்.இதையடுத்து, துணை நிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையில், அவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ias officers strike delhi - 2026

இதனிடையே தில்லி தலைமைச் செயலாளர் அன்ஸு பிரகாஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 மாதத்திற்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது.

ஆனால், அதிகாரிகளின் இந்தப் போராட்டங்களை மத்திய அரசும் ஆளுநரும் தூண்டிவிட்டு தில்லி அரசின் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்வதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும்படி கேஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். ரேஷன் அட்டையை நேரடியாக வீட்டிற்கே சென்று கொடுக்கும் தமது அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்துவதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் செய்து ஆட்சிக்கு வருவார்கள், ஆட்சிக்கு வந்தபின்னும் தங்கள் ஆட்சியிலேயே அரசியல் செய்வதை ஆம் ஆத்மி கட்சி மட்டுமே செய்ய முடியும் என்று தில்லிவாசிகள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories