தில்லியை ஆளில்லா விமானம் மூலம் தாக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்

Published:

புது தில்லி: தில்லியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தில்லி போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் ஆளில்லா விமனங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் தில்லியில் பறக்கும் அனைத்து விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தில்லியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று இயக்கப்படும் ஆளில்லா விமானங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img