ஆப்கன் வீரர்களையும் ரசிகர்களையும் நெகிழவைத்த நிகழ்வு! பாராட்டு மழையில் ரஹானே!

INDVsAFG - 2026

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே இப்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இன்று நடைபெற்ற பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி வென்ற பின்னர் கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தார் அஜிங்க்யா ரஹானே. அவரின் இந்தச் செயல் அங்கிருந்தோரை மட்டுமல்ல, டிவி.,யில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் ஆனந்தக் கண்ணீரை வரவைத்தது.

இதற்குக் காரணம் இல்லாமலில்லை. அண்மையில்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. அதன் பின்னர், தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடியது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி 2 நாள்களில் முடிந்து போனது ஒரு புறம் இருந்தாலும், ஆப்கன் அணி வீரர்களுக்கு இது மிகப் பெரும் கௌரவமாகவே இருந்தது.

இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 474 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடியது. இதில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

afghan indian team - 2026

ஆப்கன் அணி தாம் விளையாடிய முதல் போட்டியில் இரு இன்னிங்க்ஸிலும் 100 ரன்களுக்கு மேல் கடந்தது என்றாலும், அணி வீரர்களுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. போட்டியில் இன்னும் இரு நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடி இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம். இருப்பினும் விளையாட்டில் எதுவும் சொல்ல இயலாதுதான்!

இந்தப் போட்டிக்குப் பின்னர் வெற்றிக் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அமர்ந்தனர் இந்திய வீரர்கள். அப்போது அஜிங்க்யா ரஹானே செய்த செயல், அனைவரையும் நெகிழச் செய்தது. தோல்வி அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்த ஆப்கன் அணி வீரர்களையும் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தார் ரஹானே. சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த இந்த வீடியோ பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக தூள் பறக்கிறது.

 

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories