ஆப்கன் வீரர்களையும் ரசிகர்களையும் நெகிழவைத்த நிகழ்வு! பாராட்டு மழையில் ரஹானே!

INDVsAFG - 2026

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே இப்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இன்று நடைபெற்ற பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி வென்ற பின்னர் கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தார் அஜிங்க்யா ரஹானே. அவரின் இந்தச் செயல் அங்கிருந்தோரை மட்டுமல்ல, டிவி.,யில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் ஆனந்தக் கண்ணீரை வரவைத்தது.

இதற்குக் காரணம் இல்லாமலில்லை. அண்மையில்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. அதன் பின்னர், தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடியது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி 2 நாள்களில் முடிந்து போனது ஒரு புறம் இருந்தாலும், ஆப்கன் அணி வீரர்களுக்கு இது மிகப் பெரும் கௌரவமாகவே இருந்தது.

இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 474 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடியது. இதில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

afghan indian team - 2026

ஆப்கன் அணி தாம் விளையாடிய முதல் போட்டியில் இரு இன்னிங்க்ஸிலும் 100 ரன்களுக்கு மேல் கடந்தது என்றாலும், அணி வீரர்களுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. போட்டியில் இன்னும் இரு நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடி இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம். இருப்பினும் விளையாட்டில் எதுவும் சொல்ல இயலாதுதான்!

இந்தப் போட்டிக்குப் பின்னர் வெற்றிக் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அமர்ந்தனர் இந்திய வீரர்கள். அப்போது அஜிங்க்யா ரஹானே செய்த செயல், அனைவரையும் நெகிழச் செய்தது. தோல்வி அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்த ஆப்கன் அணி வீரர்களையும் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தார் ரஹானே. சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த இந்த வீடியோ பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக தூள் பறக்கிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories