December 5, 2025, 6:56 PM
26.7 C
Chennai

ஆப்கன் வீரர்களையும் ரசிகர்களையும் நெகிழவைத்த நிகழ்வு! பாராட்டு மழையில் ரஹானே!

INDVsAFG - 2025

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே இப்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இன்று நடைபெற்ற பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி வென்ற பின்னர் கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தார் அஜிங்க்யா ரஹானே. அவரின் இந்தச் செயல் அங்கிருந்தோரை மட்டுமல்ல, டிவி.,யில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் ஆனந்தக் கண்ணீரை வரவைத்தது.

இதற்குக் காரணம் இல்லாமலில்லை. அண்மையில்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. அதன் பின்னர், தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடியது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி 2 நாள்களில் முடிந்து போனது ஒரு புறம் இருந்தாலும், ஆப்கன் அணி வீரர்களுக்கு இது மிகப் பெரும் கௌரவமாகவே இருந்தது.

இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 474 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களில் ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடியது. இதில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

afghan indian team - 2025

ஆப்கன் அணி தாம் விளையாடிய முதல் போட்டியில் இரு இன்னிங்க்ஸிலும் 100 ரன்களுக்கு மேல் கடந்தது என்றாலும், அணி வீரர்களுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. போட்டியில் இன்னும் இரு நாட்கள் தாக்குப் பிடித்து விளையாடி இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம். இருப்பினும் விளையாட்டில் எதுவும் சொல்ல இயலாதுதான்!

இந்தப் போட்டிக்குப் பின்னர் வெற்றிக் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அமர்ந்தனர் இந்திய வீரர்கள். அப்போது அஜிங்க்யா ரஹானே செய்த செயல், அனைவரையும் நெகிழச் செய்தது. தோல்வி அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்த ஆப்கன் அணி வீரர்களையும் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தார் ரஹானே. சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த இந்த வீடியோ பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக தூள் பறக்கிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories