‘காலா’வதியாகிப் போனாலும்…. “நல்லாப் போவுது காலா” என சந்தோஷிக்கும் ‘சன்யாஸி’ ரஜினி !

kaala rajini1 - 2026

காலா படம் நன்றாகப் போவதாக ரஜினி காந்த் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், வசூலில் அது தோல்வியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதை மறைக்கவே ரஜினி டார்ஜிலிங்கில் தங்கியிருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ரஜினி நடித்த காலா திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுதும் வெளியானது. கர்நாடகாவில் மறு நாளிலிருந்து வெளியானது. இந்தப் படம் அரசியல் பின்னணியில் வந்ததால், இருவேறு அரசியல் சார்பு இந்தப் படத்துக்கு ஏற்பட்டது. படம் வெளியிடும் முன் எதிர்த்தவர்கள், படம் வெளியானபின் ஆதரவு தெரிவித்த்னர். படம் வெளியாகும் முன் ஆதரவு தெரிவித்த கட்சியினர் படம் வெளியான பின்னர் முகம் சுளித்தனர்.

இப்படி இந்தப் படத்துக்கு இரு வேறு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. இருப்பினும் ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலி படத்தைவிட காலா மிகவும் குறைவாகவே வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் படம் நல்ல வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாகவும், அதற்குக் காரணம், நிர்ணயிக்கப் பட்ட டிக்கெட் கட்டணங்களை விட முறைகேடாக வசூல் செய்திருப்பதுதான் என்கிறார்கள்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

ஆன்மிக உணர்வு அதிகம் கொண்ட மக்கள் நிறைந்த ஆந்திரத்தில், அடிதடி அமானுஷ்யனங்களை அதிகம் விரும்பும் மக்கள் அதிகம் நிறைந்த தெலுங்கு தேசத்தில், காலா போன்ற படங்கள் எடுபடுவது சற்றே கடினம் தான் என்பதை நிரூபித்திருக்கிறது காலா! படம், தெலுங்கிலும், ஹிந்தியிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதனிடையே, சென்னையைத் தவிர தமிழகத்தின் பல வெளியூர்களில் காலா வெளியான தியேட்டர்களில் படம் காலாவதியாகி, வேறு படத்தை மாற்றி திரையிட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலா, தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலைப் பெறவில்லை என்பதே உண்மை என்று, காலா வெளியீட்டாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கூறுகின்றனர். ஆயினும், ரஜினிகாந்த்தோ, டார்ஜிலிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடவுளின் அருளால் தமிழ்நாடு, கர்நாடகா, வெளிநாடுகள் ஆகியவற்றில் காலா படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தாம் நிஜ வாழ்வில் நம்புக் கடவுளைப் பற்றி விமர்சித்து படத்தில் நடித்து, கடவுள் அருளால் படம் வெற்றி அடைந்ததாக தேர்ந்த நடிகரான ரஜினியால் மட்டுமே கூற முடியும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்நிலையில், தாம் அடுத்த படத்துக்காக டார்ஜினிலிங்கில் ஒரு மாதம் வரை தங்கியிருக்கப் போவதாகக் கூறியுள்ளார் ரஜினி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories