இப்படி இருந்தால்… மோடியால் பணி செய்ய இயலுமா? கேட்கிறார் கேஜ்ரிவால்!

34 May17 arvind - 2026

புது தில்லி: இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால், பிரதமர் மோடியால் பணி செய்ய இயலுமா என்று கேள்வி எழுப்புகிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

வித்தியாசமான போராட்டங்களை நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். தன் அரசுக்கு எதிராக, சொல்லப் போனால் தனக்கு எதிராக தானே போராட்டத்தில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர். அவர் இப்போது  5வது நாளாக இன்று தில்லி துணை நிலை ஆளுநர் இல்லத்தில் உள்ளிருப்பு – தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன் வீட்டை மறந்து ஆளுநர் இல்ல விருந்தினர் அறையே கதி என்று போராட்டத்தை நடத்தி தில்லிவாசிகளின் கவனத்தைக் கவர்ந்து வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

ias officers strike delhi - 2026

தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பாய்ஜல் இல்லத்தின் விருந்தினர் அறையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் தங்களது நான்காவது நாள் இரவை சோபாவில் தூங்கியபடி கழித்தனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

சர்க்கரை நோயாளியான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வீட்டில் இருந்து புத்தகங்கள், இன்சுலின் ஊசிகள், மருந்து மாத்திரைகள், உணவு, மாற்று உடைகள் போன்றவை கொடுத்து அனுப்பப்படுகின்றன.  ஆளுநர் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுப்பதில்லை என்பது கேஜ்ரிவாலின் புகார்.

தில்லி அரசுக்கு எதிராக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாகவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களின் கூட்டங்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் அன்ஸு பிரகாஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் ஆம் ஆத்மி அரசுக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனராம்.

அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடச் செய்ய உரிய முயற்சிகளை மேற்கொள்ளாமல், பழியை மத்திய அரசின் மீதும், ஆளுநர் மீதும் திருப்பிவிட்டிருக்கிறார் கேஜ்ரிவால். முதல்வராக இருந்து கொண்டு நிர்வாகத்தை சரியாக நடத்தத் தெரியாமல், வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்டு, நாட்களை கழித்து வருகிறார். தொடர்ந்து, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அரசுப் பணிக்கும் அமைச்சர்கள் கூட்டத்திற்கும் வராத அதிகாரிகள் மீது அத்தியாவசிய சேவைகள் சட்டமான எஸ்மாவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரேசன் கார்டுகளை வீட்டுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்னாவை ஆளுநர் இல்லத்தில் தங்கி மேற்கொண்டு வருகிறார்.

இதற்குக் காரணமாக அவர் கூறுவது, அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தில்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்கிறது ஆம் ஆத்மி கட்சி.

தில்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை சரியாகக் கையாளத் தெரியாமல், மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதிய கேஜ்ரிவால், இந்தப் பிரச்னையில் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். இப்படி இருந்தால் எப்படி பணி செய்ய முடியும்? மோடிஜியால் ஒரு நாளாவது இப்படி ஒரு சூழலில் பணியாற்ற முடியுமா? விமர்சிப்பவர்கள் எங்களுக்குச் சொல்லுங்கள், இதுபோன்ற சூழலில் எங்களால் எப்படி செயலாற்ற இயலும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

1 COMMENT

  1. இதை விட பல மடங்கு ஒத்துழையாமை காங்கிரஸ் நடத்தியும் குஜராத்தை முன்னேற்றி காட்டினார் மோடி . ஆட தெரியாதவன் தெரு கோணல் என்றானாம் AK

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories