தில்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்! முரண்டு பிடிக்கும் குமாரசாமி!

05 June13 Kumarasamy - 2026

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தில்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராக, கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாகக் கூறி போராட்டங்களை நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவது என்று கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் திங்கள் கிழமை நாளை நடைபெறும் நிலையில், இது குறித்து ஆலோசிப்பதற்காக குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பெங்களூரு விதான் சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இதில் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்ப்பது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்டு மேல் முறையீடு செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை இருப்பதால், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே கர்நாடக எம்.பிக்கள் குரல் எழுப்பவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் தரப்பு வாதத்தை வலியுறுத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அறிவித்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு திட்டத்தை ஏற்க முடியாது என முதலமைச்சர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் இதனைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பிரச்னையை நீட்டித்துக் கொண்டே போவதுதான் தங்கள் அரசியல் இருப்புக்கான ஒரே வழி என குமாரசாமி யோசித்து செயலாற்றி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories