தில்லியில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி இருவரும் உரையாடினர். நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரையின் அழைப்பின் பேரில், தம்பிதுரை அறைக்கு வந்தார் பியூஷ் கோயல். அங்கே அவருக்காகக் காத்திருந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும், பியூஷ் கோயலுக்கு சால்வை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் பியூஷ் கோயலுடன் விவாதித்தனர்.