உள்நாட்டு போர் ஏற்படும்: மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

11 June23 Mamtha - 2026

புது தில்லி: தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் நாட்டு மக்களை பிரித்தால் உள்நாட்டுபோர் வெடிக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்காள தேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய வர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை.

குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப் பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக இன்று தில்லிக்கு வந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் மக்களை மத்திய அரசு பிரித்தாளுகிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு நாட்டில் உள்நாட்டு போருக்கு வழிஏற்படுத்தும். ரத்த ஆறு ஓடும் என்றார்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

அசாம் மாநில விவகாரம் தேசிய அளவில் எதிரொலித்து வருகிறது. 40 லட்சம் பேர் என்பது பெரிய அளவு என்றும், அவர்கள் அகதிகளாக எங்கே போவார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த பலர் இது தொடர்பாக அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மம்தாவீன் கருத்து  குறித்து சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஓட்டு வங்கியை மனதில் கொண்டு செயல்படும் அரசியல் தலைவர்களை முதலில் களையெடுக்க வேண்டும். மம்தா பேகம் வண்டவாளம் தண்டவாளம் ஏறி வருகிறது. இவரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும். சட்ட விரோதமாக வந்தவர்களை வெளியேற்றுவதில் என்ன தவறு உள்ளது. அவர்களுக்கு அவர்கள் மதம் சார்ந்த நாடுகள் எவ்வளோவோ உள்ளன அங்கே போக வேண்டியது தானே. அரபு நாடுகளே வங்கதேசிகள் குணம் அறிந்து விசா கொடுப்பதில்லை. தவிர, அரபு நாடுகளால் புறக்கணிக்கப்படுபவர்கள் வங்கதேசிகள் மற்றும் பாகிஸ்தானியர்.

ஒன்று புரியவில்லை. பதவி வெறியும் ஆணவமும் கொண்ட இவர் முதல் அமைச்சரா இல்லை தேசத்துரோகியா. அருமையான மேற்கு வங்கத்தை நாசமாக்குவேன் என்கிறார்.  மத்திய அரசும் எல்லை பாதுகாப்புப் படையும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசும் இவர் என்ன தீமை வேண்டுமானாலும் செய்வார். முன்னெச்சரிக்கை தேவை.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

எல்லா நாடுகளும், அந்த நாட்டில் முறையாக குடியுரிமை பெறாதவர்களை வெளியேற்றுகிறது. இங்குள்ள அரசியல் வாதிகள்தான் வெளி நாட்டிலிருந்து ஊடுருவியவர்களுக்கு துணை போகிறது. 5 லட்சம் காஷ்மீர் மக்களை துரத்தியபோது வாய்திறக்காதவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊடுருவியவர்களுக்கு ஆதரவளிக்க போராடுகிறார்கள்.

இவர்களால்தானே நீங்கள் இத்தனை நாட்களாக தேர்தலில் வெற்றி பெற்று வந்தீர்கள். இப்போது அதைக் கண்டுபிடித்ததும் துள்ளுகிறார்… அரசியலில் இனி இவருக்கு இறங்குமுகம்தான்… என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

  1. மம்தா பேசுவது சரிஇல்லை. ஒரு முதல்வர் எப்படி உள்நாட்டு போர் வெடிக்கும் என்று கூறலாம். அதுவும் எதிர்கட்சிகள் இவரை பிறதமவேட்பாளர் என்று கூறிவருகின்றனர். கவனிக்கவேன்டியவிஷயம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories