பசு எருதை மட்டும் கொல்ல தடை விதித்தது ஏன்?: மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

mumbai-high-courtமும்பை: பசுக்களையும் எருதுகளையும் மட்டும் கொல்வதற்கு தடை விதித்தது ஏன்? என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் பசுவதைக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறி யாராவது மாட்டு இறைச்சியை விற்பனை செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படலாம். இந்நிலையில் இந்தத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்கள் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் வி.எம்.கானடே, ஏ.ஆர்.ஜோஷி தலைமையிலான அமர்வு, “மகாராஷ்டிராவில் பசுக்கள் மற்றும் எருதுகள் மட்டும் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஏன்? ஆடுகள் உட்பட மற்ற விலங்குகள் கொல்லப்படுவதில் ஆட்சேபணை ஏதும் இல்லையா?” என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர் சுனில் மனோகர் “அரசின் இந்த நடவடிக்கை ஒரு தொடக்கம்தான். பசு, எருது ஆகியவற்றைப் போல் மற்ற விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கும். தற்போது பசு, எருதுகள் பாதுகாக்கப்படுவது அவசியமானது என அரசு கருதுகிறது” என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அஸ்பி சினாய் “அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது. மேலும், குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. குறிப்பாக, வெளிமாநிலங்களிலிருந்து மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த மனுக்கள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வெளிமாநிலங்களிலிருந்து மாட்டிறைச்சி கொண்டு வருவதை உரிமங்கள் வழங்குவதன் மூலம் அனுமதிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் ஏப். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories