ஏமனில் உள்ள தங்கள் நாட்டு மக்களையும் மீட்க இந்தியாவிடம் கோரிக்கை

Published:

தில்லி: ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியா எடுத்த வெற்றிகரமான நடவடிக்கையைப் பார்த்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 26 நாடுகள் பாராட்டு தெரிவித்ததுடன், தங்களுக்க்கும் இந்தியா உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பணிக்கு ஆபரேஷன் ரஹத் என்று பெயரிடப்பட்டது. ஏமனின் அண்டை நாடான சவுதி அரேபியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருப்பதால் இந்தியர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்படவில்லை. எல்லாம் சரியாகவே நடந்தது. மீட்புப் பணிகளை பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் கண்காணித்து வருவதால் மீட்புப் பணிகள் தொய்வின்றி நடந்தன. இதுவரை ஏமனிலிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படை, கப்பற்படை, ராணுவம் என அனைத்துத் தரப்பு ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் இப்போது இது சாத்தியமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img