இந்திய வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைப்போம்; காங்.கின் 48 வருடத்தை விட நம் 48 மாத ஆட்சி சிறப்பு: மோடி!

Published:

modi on bjp council - 2026

புது தில்லி: இந்தியாவின் வளர்ச்சிக்காக ஓய்வு இன்றி உழைப்போம். பாஜகவின் 48 மாத ஆட்சி, காங்கிரசின் 48 ஆண்டு ஆட்சியை விட சிறப்பானது என்று பேசினார் பிரதமர் மோடி.

தில்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக.,தேசிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. நேற்றைய நிறைவு நாளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் மோடி.

அப்போது அவர், யாராலும் வசப்படுத்த முடியாத இந்தியாவின் வெற்றி, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் அஜய் பாரத், அடல் பாஜ்பா என்ற ஒரு கோஷத்தை வரும் மக்களவை தேர்தலுக்காக முன்மொழிந்தார்.

கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாதவர்கள், ஒருவருக்கொருவர் பேச முடியாதவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்கும் நிலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறி, பாஜக.,வுக்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது குறித்து விமர்சித்தார் மோடி. ஆனால், இதுவேதான் பாஜக.,வுக்குக் கிடைத்த வெற்றி! மக்கள் நம் திட்டங்கள், கட்சி, தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

மேலும், பாஜகவின் 48 மாத ஆட்சி, காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டுகள் ஆட்சியை விட சிறப்பானது. பாஜகவின் கொள்கைகள் என்றும் மாறாது ஆனால், யுக்திகள் நேரத்துக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் என்றார் மோடி!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img