7ஆவது சம்பள கமிஷன் அறிக்கை: அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மிக அதிக உயர்வு

Published:

புதுதில்லி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7ஆவது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மிக அதிக உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், 23 சதவீதம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பட்டியலில் மிகவும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முதல் நிலை ஊழியர்கள் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அவர்களுக்கும் கீழ்நிலை ஊழியர்களுக்கும் சம்பள வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது. கீழ்நிலை ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தை விட உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஊழியர்கள் பல மடங்கு சம்பளம் வாங்கி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கெனவே கீழ்நிலை ஊழியர்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 7ஆவது சம்பள கமிஷனில் மேல்நிலை அதிகாரிகளுக்கு இப்போது அதிக சம்பள உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உச்ச நிலையில் உள்ள ஊழியர்களுக்கு 28 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் கீழ்நிலை ஊழியர்களுக்கு 17 சதவீதம் மட்டுமே கூடுதலாக அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

கேபினட் செயலாளர் ஒருவருக்கு தற்போது ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் சம்பளம் கிடைத்து வருகிறது. அவருக்கு ரூ.2½ லட்சம் சம்பளம் வழங்க சிபாரிசு செய்துள்ளனர். செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். அவருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் கூடுதலாகும். கூடுதல் செயலாளராக இருக்கும் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் தற்போது வழங்கப்படுகிறது. அது ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கீழ்நிலையில் உள்ள ஊழியருக்கு ரூ.15 ஆயிரத்து 330 சம்பளம் வழங்கப்படுகிறது. அது 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 17.4 சதவீதம் மட்டுமே கூடுதலாக சம்பளம் கிடைக்கும். இதே போல கீழ்நிலை ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு அலவன்ஸ்சுகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு கீழ்நிலை ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img