ப்ளீஸ் கோ.. ப்ளீஸ் கோ… ஆளுநரும் எம்.எல்.ஏ.,வும் இப்படி மாறி மாறி சொன்னா…?

kiranbedi mla - 2026

புதுச்சேரி அரசு விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், அதிமுக எம்எல்ஏ அன்பழகனும் ஒருவரை ஒருவர் ப்ளீஸ் கோ… ப்ளீஸ் கோ.. என்று அடுத்தவரை வெளியே போகுமாறு கூறி மேடையிலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலமாக அறிவிக்கும் விழா, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசு விழா நடைபெற்ற இடம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்டது என்பதால் தொகுதி எம்எல்ஏ அன்பழகனும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசும்போது புதுச்சேரி அரசை கடுமையாக சாடினார்.  புதுச்சேரியை திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநிலமாக அறிவிக்கும் நிலையில், தனது தொகுதியில் குப்பைத் தொட்டி வசதிகள் கூட சரிவர செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

ஆனால், இது அரசு விழா என்பதால் நேரத்தை கடைப்பிடித்து சீக்கிரம் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும் என்று  கிரண்பேடி கூறினார்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

அதற்கு செவிசாய்க்காத எம்.எல்.ஏ., அன்பழகன்  தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த கிரண் பேடி, எழுந்து சென்று, எம்.எல்.ஏ., அருகில் சென்று, விரைந்து பேச்சை முடித்துக் கொள்ளவும் என்று வலியுறுத்தினார்.

இது எம்.எல்.ஏ.,வுக்கு கோபத்தை வரவழைத்தது. இதை அடுத்து அவர் பதிலுக்கு கத்திப் பேசினார். வாக்குவாதம் வளர்ந்தது. அப்போது எம்.எல்.ஏ., பேசும் மைக் அணைக்கப்பட்டது. இது அன்பழகனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இதை அடுத்து வாக்குவாதம் முற்றியது. மேடையிலிருந்து கீழே இறங்கிச் செல்லுமாறு ப்ளீஸ் கோ… என்று எம்.எல்.ஏ.,வை கிரண்பேடி கூற, பதிலுக்கு எம்எல்ஏ அன்பழகனும் ப்ளீஸ் கோ என்று கூறினார். மீண்டும் இரு கைகளையும் குவித்து… ப்ளீஸ் கோ என்று கிரண்பேடி கூறியபோது எம்எல்ஏ அன்பழகனும் பதிலுக்கு இரு கரம் கூப்பி ப்ளீஸ் கோ என்றார். தொடர்ந்து தனக்கு ஆதரவாக யாராவது பேசுவார்களா என்று யோசித்து அருகில் இருந்தவரிடம் சென்று முறையிட்டார். ஆனால் பேச்சு மூச்சு எதுவும் இல்லை.

இதை அடுத்து மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்ற எம்எல்ஏ அன்பழகன், செய்தியாளர்களிடம் பேசிய போது, கிரண்பேடியின் செயல் அநாகரீகமானது… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான என்னை, கொல்லைப்புறமாக வந்த ஆளுநர் கிரண்பேடி அவமதித்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.

ஆனால், அரசு விழாவில் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்குமாறு தாம் வலியுறுத்தியதாகவும், அதிமுக எம்எல்ஏ அன்பழகனை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் கிரண்பேடி விளக்கம் அளித்தார்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இருப்பினும், ஆளுநர் தமக்கு அவமரியாதை ஏற்பட்டதாகக் கருதி அங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும், நல்லவேளை பழைய ஐபிஎஸ் ஆபீஸர் மன நிலையில் கையை நீட்டி அடிக்காமல் விட்டாரே என்றும் சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்துக்கு கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.

அந்த நிகழ்வின் காணொளிக் காட்சி இதோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories