உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ரஞ்சன் கோகோய்

Published:

ranjan gogoi2 - 2026

புதுதில்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த தீபக் மிஸ்ரா அக்டோபர் 1 ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி யாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் பதவி ஏற்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகாய், வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அடுத்த 14 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் நீடிக்கும் அவர், அடுத்த ஆண்டு நவம்பரில் ஓய்வுபெற உள்ளார்.

இதனிடையே, தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள ரஞ்சன் கோகாய் சொத்து மதிப்பு குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வெளியிட்டார். அதில், ரஞ்சன் கோகாய்க்கு சொந்தமாக தங்கம் எதுவும் இல்லை. அவரது மனைவிக்கு திருமணத்தின் போது அவரின் பெற்றோர் சீதனமாக அளித்த நகைகள் மட்டுமே உள்ளது. சொந்த வாகனங்கள் ஏதும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக நீதிபதிகளாக இருப்பதால் அரசு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.

தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள கோகாய்க்கு சொந்தமாக வீடோ, வங்கி கடனோ, சொத்துக்கள் அடமானமோ ஏதும் இல்லை. எல்ஐசி பாலிசி, வங்கி சேமிப்பு என ரூ.30 லட்சம் மட்டுமே உள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img