December 5, 2025, 6:37 PM
26.7 C
Chennai

பஞ்சாப் சோகம்… பற்றி எரிந்த ராவண பொம்மை! 61 பேர் உயிரிழப்பால் நெருக்கடியில் காங்கிரஸ்!

Amritsar Punjab Train Accident - 2025

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதாபதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பஞ்சாப் உள்ளாட்சித்துறை அமைச்சரும் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியுமான நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தசரா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அதைக் காண சுமார் 600 பேர் அந்த மைதானத்தில் திரண்டனர். கூட்டத்தால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால் ரயில் தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் பலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் ஹவுராவுக்குச் செல்லும் ரயில் கடந்து சென்றது. அந்த ரயில் மைதானம் அமைந்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவு என்பதால் சற்று மெதுவாகத்தான் கடந்து சென்றது. ஆனால் அது கடந்த 30 நொடிகளில் எதிர் திசையில் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக அடுத்துள்ள பாதையில் வந்துள்ளது.

தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரயில்கள் வரும் சத்தம் எவருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ஆர்வ மிகுதியால் அங்கேயே நின்றிருந்தனர். மேலும் சிலர் செல்போனில் படம் பிடிப்பதில் ஆர்வத்துடன் இருந்ததால், வேறு கவனம் அவர்களுக்கு இல்லாமலிருந்தது.

ரயில்கள் நெருக்கமாக வந்து கடந்த போதுதான் ரயில் வரும் உணர்வே அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் குறைந்த அவகாசமே இருந்ததால், ரயில் பாதையில் இருந்து தப்பிக்க வழி இன்றி, கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. அந்த நொடியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சிலர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். பலருக்கு கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தன் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். விபத்து காரணமாக அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் அந்த இடத்தைப் பார்வையிடச் சென்ற மாநில கல்வி அமைச்சர் ஓ.பி.சோனியை மக்கள் தாக்கியுள்ளனர். இதனிடையே, இந்த விபத்து குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

ரயில் தண்டவாளம் அருகே உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.

இந்த விபத்து தொடர்பாக ஆளும் காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளன. ரயில்வே தண்டவாளம் அருகே தசரா விழா நடத்த அனுமதி அளித்த அரசுதான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்து நடந்ததும் சிறப்பு விருந்தினர் நவ்ஜோத் கவுர் அந்த இடத்தை விட்டுச் சென்றது தவறு என்றும் குற்றம் சாட்டப் படுகிறது.

நடந்த சம்பவத்திற்கு மாநில அரசு தான் பொறுப்பு என்று மத்திய அமைச்சரும் அகாலி தள தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.

இப்போது இந்த ரயில் விபத்து பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது. கூடவே அரசியல் ரீதியில் விமர்சனமும் முன் வைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories