December 5, 2025, 6:46 PM
26.7 C
Chennai

சிபிஐ., இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்: கட்டாய விடுப்பில் அலோக் வர்மா

cbi director nageswarara rao e1540362266942 - 2025

சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இடையே மோதல் நிலவிவரும் நிலையில் இணை இயக்குநர் நியமனம் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம், வங்கி மோசடி தொடர்பான புகாரில் சிக்கியதையடுத்து ராகேஷ் அஸ்தானா மீது புகார் எழுந்தது. அவரை சிபிஐ இணை இயக்குனராக நியமிக்க தொடக்கத்தில் இருந்தே அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த மோதல் குரேஷி வழக்கில் உச்சக் கட்டத்தை எட்டியது.

ராகேஷ் அஸ்தானாவுக்கு இறைச்சி ஏற்றுமதியாளர் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப் பட்டது. லஞ்ச பணத்தை கைமாற்றியதாக அண்மையில் மனோஜ் பிரசாத் என்ற தரகர் அண்மையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார். இதை அடுத்து ராகேஷ் குமார் மற்றும் சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது வழக்கு பதியப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேவேந்திர குமாரும் கைதானார்.

இதனிடையே, லஞ்ச வழக்கில் தம்மை கைது செய்ய தடை விதிக்கக் கோரி ராகேஷ் அஸ்தானா தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை அடுத்து ராகேஷை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அந்த வழக்கு அக்.29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதலுடன் சிபிஐ இணை இயக்குனரான ஐபிஎஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ், சிபிஐ இயக்குனரின் பொறுப்புகளை கவனிப்பார் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டது. இந்த நியமன உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த ஆணைக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டது.

மேலும், அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வர்மா மனுத்தாக்கல் செய்ததாகவும், அலோக் வர்மா மனுவை வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories