December 6, 2025, 3:24 AM
24.9 C
Chennai

பம்பை, நிலக்கல் பகுதிகளில் `144 தடை உத்தரவு!

nilakkal protest - 2025

பத்தனம்திட்ட: நவ.5 திங்களன்று சிறப்பு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப் படுகிறது. இதை முன்னிட்டு, இன்று முதல் 6ஆம் தேதி வரை பம்பை, நிலக்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதாக பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சபரிமலையில் இன்று இரவு முதல் ஆறாம் தேதி இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. நிலக்கல் , பம்பை , இலவுங்கல் , சன்னிதானம் ஆகிய இடங்களில் தடை உத்தாவு அமல்படுத்தப்படும். சித்திரை ஆட்டத் திருநாள் விழாவுக்காக வரும் 5ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது 6ம் தேதி இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

அண்மைக்காலமாக சபரிமலை விவகாரத்தில், கம்யூனிஸ கொள்கைகளைப் புகுத்த கம்யூனிஸ மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநில முதல்வர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு, தங்கள் கட்சியின் கொள்கைகளை இந்து மக்களின் பாரம்பரியக் கொள்கைகளைச் சிதைப்பதில் தீவிரம் காட்டி வரும் மாநில அரசு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை சந்நிதானத்துக்குச் செல்லலாம் என்று கூறி, அதனை நடைமுறைப் படுத்த தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் ஐப்பசி மாதப் பிறப்பு பூஜைகளுக்கு சபரிமலை நடை திறந்து 5 நாட்கள் பூஜைகள் நடைபெற்றன. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து முதல்முறை நடை திறக்கப்படுவதால், ஹிந்து மத நம்பிக்கை கொண்ட பெண்கள் இல்லாவிட்டாலும், யாரையாவது மலைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று அரசு தீவிரம் காட்டியது.

இதை அடுத்து பாஜக., ஆர்.எஸ்.எஸ்., சபரிமலை சேவா சமாஜத்தினர், ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள் என அனைத்துத் தரப்பும் இணைந்து மலையில் ஓர் அரணாக நின்று சபரிமலை ஒழுக்கத்தைக் காத்து நின்றனர்.

இந்நிலையில் மீண்டும் தற்போது நடை திறக்கப்படும் நிலையில், சபரிமலையில் வன்முறைகளை நிகழ்த்த சுமார் 2000 கம்யூனிஸ தொண்டர்களுக்கு சிறப்பு பாதுகாவல் அந்தஸ்து கொடுத்து சபரிமலை, பம்பை, பத்தனம்திட்ட, நிலக்கல் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories