February 24, 2026, 5:26 AM
25 C
Chennai

செம்மர படுகொலை: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

red-sanders-killed-andhra ஹைதராபாத்: திருப்பதி சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த தகவல்களை வெள்ளிக்கிழமை நாளைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திருப்பதி வனப்பகுதியில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில மனித உரிமை சங்கம், ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி கல்யாண்சிங் குப்தா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது ஆந்திர அரசு சார்பில் ஆஜரான அரசு வக்கீல், இன்னும் பிரேத பரிசோதனை நடைபெறாத நிலையில், விசாரணையை தள்ளி வைத்து கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மனித உரிமை சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் கிராந்தி சைந்தன்யா, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்ள ஆந்திர காவல்துறை காலக்கெடு விதித்துள்ளது, எனவே இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆந்திர மாநில அரசுக்குப் பிறப்பித்த உத்தரவில், என்கவுண்டரில் உயிரிழந்தவர்களின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் உடல்களை சரியான முறையில் பாதுகாத்து கௌரவமாக அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை உடல்களை அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தடயவியல் நிபுணர்களைக் கொண்டு உடல்களை சோதனையிட வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த என்கவுண்டர் தொடர்பான தகவல்களை ஆந்திர தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் ஆகியோர் 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். -என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Entertainment News

Popular Categories