பிணரயி விஜயன் நடத்தியது… அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது பொலிட் பீரோவா? காங்கிரஸ் வெளிநடப்பு!

allpartymeetkerala - 2026

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறினார். இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. இது அனைத்துக் கட்சிக் கூட்டமா அல்லது கம்யூனிஸ்ட்களின் கொள்கை முடிவுகளை அறிவிக்கும் பொலிட் பீரோவா என கேள்வி எழுந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்துக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அந்தத் தீர்ப்பை தாங்களே கேட்டுப் பெற்றது போல், ஆவேசமாக தீர்ப்பை அமல்படுத்த உடனடி நடவடிக்கைகளில் இறங்கியது மாநில கம்யூனிஸ்ட் அரசு. அதன் நடவடிக்கைகளும் வேகமுமே மாநில அரசுக்கு உள்நோக்கம் இருப்பதை பகிரங்கப் படுத்தியது.

இந்நிலையில், எப்படியாவது இளம் பெண்களை, அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, எந்த மதத்தினராய் இருந்தாலும் சரி என்று அடம் பிடித்து, மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்துக்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. இந்து மத நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடுடன் ஆன்மிக எண்ணம் கொண்டவர்கள் இதனால் திகைத்தார்கள். அவர்கள் எந்த விதப் போராட்டமும் நடத்தாமல், அவர்களது நம்பிக்கையை தாங்களே சிதைத்துக் கொண்டு அரசு செயல்படுத்துவதை அப்படியே வழிமொழிய வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், அதை எதிர்த்து போராடும் போது, பாஜக., வன்முறையைத் தூண்டுகிறது என்று கதறுகிறது மாநில அரசு.

இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, சிலர் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்றமும் உடனடியாக விசாரிக்க மாட்டோம் என்றும், ஜனவரி மாதம் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் எல்லாம் முடிந்த பின்னர் ஜன.22ல் விசாரிக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதை, மக்கள் எண்ணத்துக்கு விரோதமாகவும் பாரபட்சத்துடனும் அது கருத்து தெரிவித்ததாகவே பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில், பெண்களுக்கு அனுமதி என்பதை தடை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியதால், மாநில அரசு, எப்படியாவது அதை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதனால், இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் முதல்வர் பினரயி விஜயன்.

குறிப்பாக, நாளை மாலை, கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படுகிறது. இதனால் சபரிமலை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் கேரளத்தை ஆளும் பிணரயி விஜயன். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பா.ஜ.க, உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டன.ர் ஆனால், பிணரயி விஜயனின் பிடிவாதத்தால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயன் பேசிய போது, செப்.,28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இதன் மூலம், சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே விளக்கம். தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. பக்தர்களின் உணர்வுகளை மாநில அரசு மதிக்கிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

இந்த முடிவை அறிவித்து, தீர்ப்பை அமல்படுத்துவதாகவும், அதற்கு மற்ற கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்கு ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டம் எதற்காக என்று கேள்வி எழுப்பியுள்ள சிலர், இது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முடிவை அறிவிக்கும் பொலிட் பீரோ கூட்டம் என்று பிணரயி விஜயன் நினைத்துவிட்டார் போலிருக்கிறது என்று குற்றம் சாட்டினர். அதற்கு ஏற்ப காங்கிரஸ் இந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories