சாவர்க்கர் குறித்து தவறான தகவல்.. ராகுல் மீது வழக்கு பதிவு!

Published:

04 July26 Rahul Gandhi - 2026

வீர்சாவர்க்கர் பற்றி தவறான தகவல்களை கூறியதாக, ராகுல்காந்தி மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீர்சாவர்க்கரின் வம்சாவளியை சேர்ந்த ரண்ஜீத் சாவர்க்கர் என்பவர் மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்குமாறு கோரி பிரிட்டிஷாருக்கு வீர்சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதாக ராகுல்காந்தி கூறியதாகவும், இது தவறான தகவல் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷாரால் சாவர்க்கர் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அவரது புகழுக்கு களங்கம் வகையில் தேர்தல் பேரணியில் பேசியதால் ராகுல்காந்தி மீது புகார் கொடுத்திருப்பதாகவும் ரண்ஜீத் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம்தான் காந்தியைக் கொன்றது என்று தாம் கூறியது தவறு என்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார் ராகுல் என்பது குறிப்பிடத் தக்கது. 

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img