வானொலியில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு! மேனகா பகீர்!

Published:

menaka gandhi - 2026

 

 

அகில இந்திய வானொலி நிலையங்களில் பெண் அறிவிப்பாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார், மத்திய அமைச்சர் மேனகா காந்தி.

நாடு முழுவதும் அகில இந்திய வானொலியின் பல்வேறு  நிலையங்களில், பெண் அறிவிப்பாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் வந்திருக்கிறது என்றும்,  இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகில இந்திய வானொலி நிலையங்களை நிர்வகிக்கும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்கள் சங்கத்திலிருந்து வரப்பெற்ற பாலியல் தொந்தரவு தொடர்பான புகார் கடிதத்தின் அடிப்படையிலேயே  இந்தக் கடிதத்தை அவர் எழுதியிருந்தாராம்! 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img