சபரிமலைக்கு வரும் 2 பெண்கள்… தடுத்து திருப்பி அனுப்புமாறு அமைச்சர் அறிவுறுத்தல்…!

sabarimalai protest - 2026

பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் இரு பெண்களையும் திருப்பி அனுப்புமாறு மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாரம்பரிய சம்பிரதாயத்தை மாற்றி, அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர் குழுக்களும் இந்து அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும், சபரிமலைக்கு வந்தே தீருவோம் என்று வீம்புக்கு வந்து விளம்பரம் தேடிக் கொள்ளும் கம்யூனிஸ நாத்திக பெண்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம் என்று விடாப்பிடியாக அடம்பிடித்து வருகிறது கேரள அரசு!

கடந்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சந்நிதி நடை திறக்கப்பட்டபோது இளம்பெண்கள் சிலர் சபரிமலைக்கு வரும் முயற்சியில் இறங்கினர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாரம்பரியத்தை பாதுக்காகப் போராடும் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்படுவதும் நீட்டிக்கப்படுவதுமாக உள்ளது.

வரும் டிசம்பர் 27ஆம் தேதி வரை 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலை நோக்கி இரண்டு இளம்பெண்கள் இன்று காலை வந்தனர். அவர்களை அப்பச்சிமேடு பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு காவல்துறை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி, நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அப்பச்சமேடு பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். நிலைமையைக் கேட்டறிந்த அமைச்சர், பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட 2 பெண்களையும் திருப்பு அனுப்புமாறு அறிவுறுத்தினார். இதை அடுத்து 2 பெண்களும் போலீசாரால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories