புதுதில்லி : பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது. இது மோடிக்குக் கிடைத்த வெற்றி!
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, நேற்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இரவு 10 மணி அளவில், மசோதா தொடர்பான ஓட்டெடுப்பு அவையில் அவை துணைத் தலைவர் ஹரி நாராயண் சிங் தலைமையில் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் விழுந்தன. இதை அடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப் பட்டது.
அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ், பகுஜன், சமஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இம்மசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று அவை துணைத்தலைவர் தெரிவித்தார்.