பிஎஸ்எல்வி சி44 மூலம் மைக்ரோசாட்ஆர் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்! வெற்றி நடை போடும் இஸ்ரோ!

pslv c44pic - 2026

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வியாழன் இரவு, நாட்டின் நில அமைப்பை ஆராய்தல், எல்லையைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியது.

நாட்டின் புவிஅமைப்பு, எல்லைப் பகுதிகளைக் கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு, இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையில் இஸ்ரோ நிறுவனம் ‘மைக்ரோசாட்-ஆர்’ என்ற ‘இமேஜிங்’ செயற்கைக்கோளை தயாரித்தது. 690 கிலோ எடையுடன் உள்ள இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பூமியை துல்லியமாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும். இது நாட்டின் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்ய ராணுவத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் தயாரானது. இதற்கான கவுண்ட் டவுன் வியாழன் அதிகாலை தொடங்கியது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஜன.24 வியாழன் இரவு 11.37க்கு பிஎஸ்எல்வி.-சி44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 13 நிமி. 30 வினாடியில் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோளை 274.12 கி.மீ., தொலைவு புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.

இது ஒரு சாதனை என்று கருதப் படுகிறது. இதுவரை இஸ்ரோ ஏவிய செயற்கைக் கோள்களில், இதுவே குறைந்த தொலைவு புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்ட செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத் தக்க அம்சம்!

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

இந்த ஆண்டின் முதல் ராக்கெட் இதுதான். அதுவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி., வகையில், 46வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி.,-சி44 இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories