பிஎஸ்எல்வி சி44 மூலம் மைக்ரோசாட்ஆர் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்! வெற்றி நடை போடும் இஸ்ரோ!

pslv c44pic - 2026

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வியாழன் இரவு, நாட்டின் நில அமைப்பை ஆராய்தல், எல்லையைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான ‘மைக்ரோசாட்-ஆர்’ செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியது.

நாட்டின் புவிஅமைப்பு, எல்லைப் பகுதிகளைக் கண்காணித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு, இந்திய ராணுவத்துக்கு உதவும் வகையில் இஸ்ரோ நிறுவனம் ‘மைக்ரோசாட்-ஆர்’ என்ற ‘இமேஜிங்’ செயற்கைக்கோளை தயாரித்தது. 690 கிலோ எடையுடன் உள்ள இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பூமியை துல்லியமாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும். இது நாட்டின் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்ய ராணுவத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் தயாரானது. இதற்கான கவுண்ட் டவுன் வியாழன் அதிகாலை தொடங்கியது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, ஜன.24 வியாழன் இரவு 11.37க்கு பிஎஸ்எல்வி.-சி44 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட 13 நிமி. 30 வினாடியில் மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோளை 274.12 கி.மீ., தொலைவு புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.

இது ஒரு சாதனை என்று கருதப் படுகிறது. இதுவரை இஸ்ரோ ஏவிய செயற்கைக் கோள்களில், இதுவே குறைந்த தொலைவு புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்ட செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத் தக்க அம்சம்!

இந்த ஆண்டின் முதல் ராக்கெட் இதுதான். அதுவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி., வகையில், 46வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி.,-சி44 இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய முதல் ராக்கெட்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories