உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி கோல்கத்தா காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை எப்போது?!

mamata rajeev kumar - 2026

புது தில்லி : உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, கோல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, இந்த வார இறுதியில் விசாரணை நடத்தப் படும் என்று சிபிஐ வட்டாரங்கள் பதிலளித்துள்ளன.

சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாகவும், ஆதாரங்களை மறைத்தும் அழித்தும் செய்தது தொடர்பாகவும் கோல்கத்தா நகர காவல் ஆணையரை விசாரணை செய்வதற்காக சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை முதல்வர் மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரில், கோல்கத்தா போலீசார் சிறைபிடித்தனர்.

இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு போடப் பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து வெளியே இருவருக்கும் பொதுவான இடத்தில் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் சொன்னதால், சிபிஐ அதிகாரிகள் சில்லாங்கில் இருந்து தில்லி திரும்பி உள்ளனர்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நாளை முதல் ராஜீவ் குமாரிடம் விசாரணையைத் தொடங்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், விசாரணைக்கு தயாராவதற்காக ராஜீவ் குமாருக்கு 2 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் குமாரிடம் 80 முதல் 100 கேள்விகள் வரை கேட்க சிபிஐ திட்டமிட்டு கேள்விப் பட்டியலை தயாரித்துள்ளனர்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி பிப்.28க்குள் ராஜீவ் குமார் அந்தப் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் பிப்.15 முதல் 20ஆம் தேதிக்குள் அதிகாரிகள் இடமாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் மம்தா அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ராஜீவ் குமாரிடம் துரிதமாக விசாரணையை முடிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் சிபிஐ இருக்கிறது.

முன்னதாக ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதனால் சிபிஐ உச்ச நீதிமன்றத்தை நாடியது. விசாரணை முடிவில், ஷில்லாங் நகரில் சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இந்த வார இறுதிக்குள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக சி.பி.ஐ.க்கு ராஜீவ் குமாரும் கடிதம் எழுதினார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories