ஒசாமாவை அமெரிக்கா கொன்றது போல்… இந்தியாவும் செயல்பட முடியும்!

Published:

arun jaitley - 2026

ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும்  என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி!

தற்போது பாகிஸ்தான், இந்தியா இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,

பாகிஸ்தானுக்குள் புகுந்து, ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும் என்று கூறினார்!

மேலும், அமெரிக்கா போலவே இந்தியாவும் பாகிஸ்தானுக்குள் புகுந்து குறிப்பிட்ட இலக்கு நோக்கி தாக்குதல் நடத்த முடியும் என்று கூறிய அவர், இந்தியாவால் இனியும் பொறுத்திருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அமெரிக்க வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனைக் கொன்றது போல் தற்போதைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் அருண் ஜேட்லி. ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. உரிய நேரத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறிய அருண் ஜேட்லி,  எல்லையில் கடுமையான பதற்றம் நீடித்து வருகிறது என்றார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

அமெரிக்கா போல பாகிஸ்தானுக்கு உள்ளே சென்று தாக்க இந்தியா தயார், எதற்கும் தயங்காது  என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டது, போருக்கான கட்டாயச் சூழலை வெளி உலகுக்கு உணர்த்தியுள்ளது.

 

Related articles

Recent articles

spot_img