உங்கள் அசாத்திய வீரத்தைக் கண்டு நாடே பெருமை கொள்கிறது: மோடி டிவீட்!

Published:

abhinandann - 2026

பாகிஸ்தான் நாட்டில் இருந்து அந்நாட்டு அதிகாரிகளால் இன்று இரவு 9 மணி அளவில் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார் இந்திய விமானி அபிநந்தன்.

இந்நிலையில், அபிநந்தனை வரவேற்று மோடி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், நாட்டுக்கு திரும்பி வரும் விங் கமாண்டர் அபிநந்தன் வருக வருக. உங்கள் அசாத்திய வீரத்தைப் பார்த்து இந்த நாடே பெருமை கொள்கிறது. நமது ராணுவ வீரர்கள் 130 கோடி இந்தியர்களுக்கும் உந்துசக்தியாக இருக்கிறார்கள்!
வந்தே மாதரம் என்று பதிவு செய்துள்ளார்.

abhinandan1 - 2026

முன்னதாக இன்று பிற்பகல் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகம்தான் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தந்துள்ளது. இன்று நாம் எல்லோரும் கொண்டாடும் நம் விமானி அபிநந்தன் தமிழகத்தைச் சார்ந்தவரே.. என்று பாராட்டு தெரிவித்திருந்தார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img