அபிநந்தன் உடலில் உளவு பார்க்கும் சிப் ஏதும் பொருத்தப் படவில்லை! முதுகு தண்டுவடத்தில் காயம்!

abhinandan invest - 2026

அபிநந்தன் உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை – அபிநந்தனுக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உறுதியானது | விமானத்தில் இருந்து குதித்ததால் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் பாதிப்பு |

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு முதுகு தண்டுவடத்தின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது! மேலும், விங் கமாண்டர் அபிநந்தனின் உடலில் உளவு பார்க்கும் ரகசியக் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்று மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு, தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று, அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இன்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் ராவ் பாம்ரே சந்தித்துப் பேசினார்.

nirmala sitharaman abinandan - 2026

முன்னதாக, தனது குடும்பத்தினரையும் அபிநந்தன் சந்தித்துப் பேசினார். அவருக்கு அளிக்கப் பட்ட உளரீதியான சிகிச்சையின் போது, பாகிஸ்தான் ராணுவம் வசம் தான் இருந்த போது மன ரீதியாக கடுமையாக துன்புறுத்தப்பட்டேன் என்று அபிநந்தன் கூறியுள்ளார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

இதனிடையே, இந்திய ஊடகங்கள் சில, பாகிஸ்தான் உளவுத்துறையினர் அபிநந்தனின் உடலில் உளவு பார்க்கும் கருவி ஏதேனும் பொருத்தி இருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் விவாதங்களைச் செய்தன. இந்நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் முடிவுகளின்படி, உடலில் உளவு பார்க்கும் கருவிகள் ஏதும் பொருத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டதாக செய்தி வெளியானது.

அப்போது, முதுகு தண்டுவடத்தின் கீழ்ப் பகுதியில் அபிநந்தனுக்கு காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் அபிநந்தன் கீழே குதித்த போது அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் அவரை தாக்கிய போது இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

abhinandann - 2026

இதனிடையே விய்ம்பெல் R 73 ரக ஏவுகணையை பயன்படுத்தி, பாகிஸ்தானின் F16 விமானத்தை அபிநந்தன் வீழ்த்தியதாக தகவல் வெளியானது. R 73 ஏவுகணையை அவர் தாக்குதலுக்காகத் தேர்வு செய்த தகவல் தான், கடைசியாக மிக் 21 பைசன் விமானத்தில் இருந்து அவர் அனுப்பிய கடைசி ரேடியோ செய்தி. அதன் பின்னர், அவரது விமானம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் விழுந்தது. இதனால் அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்து, பாகிஸ்தான் படைகளிடம் சிக்கிக் கொண்டார்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories