கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்! ஜனாதிபதி இரங்கல்!

Published:

manohar parrikar - 2026

பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலன் தராமல் இன்று மாலை அவர் காலமானதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோவாவில் அமைந்த பாஜக., அரசை திறம்பட நடத்திச் சென்றவர் முதல்வர் மனோகர் பாரிக்கர்! 63 வயதான மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார்.

கோவாவைக் கையாள சரியான நபர் இவர் மட்டுமே என்ற நிலையில், மத்திய அமைச்சர் என்ற நிலையில் இருந்து மீண்டும் கோவா முதல்வர் என்ற நிலைக்கு பாஜக., மேலிடம் அவரை அனுப்பி வைத்தது.

goa manohar parickar - 2026

இந்நிலையில், கடந்த ஆண்டு, கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

ஆனால் சனிக்கிழமை நேற்று காலை, மனோகர் பாரிக்கரின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, உடல்நிலை மோசமடைந்ததாக, செய்திகள் வெளியாகின.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் தெரிவித்திருந்தது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் மிகத் தீவிரமாக போராடியதாகவும், ஆனால், அவர் உடல் சிகிச்சையை ஏற்கும் நிலையில் இல்லாததால், அவர் காலமானதாகவும் தகவல் வெளியானது.

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பாஜக., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img