மோடிக்கு எதிரான பொய்ச் செய்திகளால் களமாடிய காங்கிரஸ்! களையெடுத்த பேஸ்புக்..!

facebook under watch - 2026

மோடிக்கு எதிரான பொய்ச் செய்திகள், இந்தியாவுக்கு எதிரான தகவல்கள் என களமாடிய காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பேஸ்புக் நிறுவனம் சந்தேகப் படும்வகையில் உள்ள பக்கங்களை எல்லாம் நீக்கியிருக்கிறது.

இது தொடர்பில், காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் திறக்கப்பட்ட 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 138 பக்கங்கள், 549 பேஸ்புக் அக்கவுண்ட்கள் பேஸ்புக்கில் நீக்கப் பட்டுள்ளன. இவற்றில், 206000 பின்பற்றுபவர்கள் அதிகபட்சமாகவும், அதற்கு இணையாகவும் அதிகபட்ச பாலோயர்ஸுடன் பல பக்கங்கள் இருந்துள்ளன.

இவற்றில் 39 ஆயிரம் டாலர் அளவுக்கு விளம்பரத்துக்காக செலவும் செய்து, பக்கங்களை பிரபலப் படுத்தியுள்ளனர். இவற்றில் முதல் விளம்பரம், ஆக.2014லும் கடைசியாக விளம்பரம் மார்ச் 2019லும் வெளியிடப் பட்டிருக்கிறது. இவை அனைத்துமே, இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப் பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் தலையிட்டுள்ளது என்றும் அதிபர் டிரம்ப் தேர்தலில் நின்ற போது, அவருக்கு ஆதரவான கட்டுரைகளை பேஸ்புக் மக்களிடம் அதிகம் கொண்டு சென்றது என்றும், இதற்கு பின் ரஷ்யா இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது பின்னர் நிரூபிக்கப்பட்டது!

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

இந்நிலையில், பேஸ்புக் கடந்த வருடமே இதுகுறித்து முக்கிய விஷயம் ஒன்றை தெரிவித்திருந்தது. அதன்படி இனி எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் பேஸ்புக் கட்டுப்பாடுகளை விதிக்கும். பேஸ்புக்கில் முறையின்றி இயங்கும் கணக்குகள் முடக்கப்படும். தேர்தல் நேரத்தில் தவறான தகவல்களை பரப்பும் பொய்யான கணக்குகள், பக்கங்களை முடக்குவோம் என்றது பேஸ்புக் நிறுவனம்!

இந்நிலையில் இந்திய அரசும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சில கட்டுப் பாடுகளை விதித்தது. .அதன்படி, நடவடிக்கை எடுத்துள்ள பேஸ்புக், தேர்தலை முன்னிட்டு பல நூறு பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பான 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பக்கங்கள் பல பொய்யான செய்திகளை பரப்பியதாகவும், தவறான போலி கணக்குகளை கொண்டு இருந்ததாகவும் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது! இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. அதேபோல் பாஜகவினர் தொடங்கிய சில பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

ஆனால், பெரும்பாலானவை குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸின் ஐடி., பிரிவு தொடங்கிய 687 கணக்குகள் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் என்பது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான பக்கங்கள் பாகிஸ்தானில் இருந்து தொடங்கப்பட்டு நடத்தப் பட்டவை. ஆனால் அவற்றின் விளம்பரத்துக்கான தொகைகள், இந்திய ரூபாயில் பேஸ்புக் நிறுவனத்துக்கு செலுத்தப் பட்டிருக்கின்றன என்பதும், பாகிஸ்தானியர் பெயர்களில் உள்ள சில பக்கங்களில், காங்கிரஸின் விளம்பரங்கள் ஓடியுள்ளன என்பதும் இந்திய தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

1 COMMENT

  1. இத்தாலிக்காரியும் அவரது மகனுமாகிய பாப்பு, மற்றும் அவர்களது கூட்டணியில் உள்ள தீயசக்திகளை காட்டிக்கொடுத்த முகநூலுக்கு நன்றி solvom.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories