மோடிக்கு எதிரான பொய்ச் செய்திகளால் களமாடிய காங்கிரஸ்! களையெடுத்த பேஸ்புக்..!

facebook under watch - 2026

மோடிக்கு எதிரான பொய்ச் செய்திகள், இந்தியாவுக்கு எதிரான தகவல்கள் என களமாடிய காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பேஸ்புக் நிறுவனம் சந்தேகப் படும்வகையில் உள்ள பக்கங்களை எல்லாம் நீக்கியிருக்கிறது.

இது தொடர்பில், காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் திறக்கப்பட்ட 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 138 பக்கங்கள், 549 பேஸ்புக் அக்கவுண்ட்கள் பேஸ்புக்கில் நீக்கப் பட்டுள்ளன. இவற்றில், 206000 பின்பற்றுபவர்கள் அதிகபட்சமாகவும், அதற்கு இணையாகவும் அதிகபட்ச பாலோயர்ஸுடன் பல பக்கங்கள் இருந்துள்ளன.

இவற்றில் 39 ஆயிரம் டாலர் அளவுக்கு விளம்பரத்துக்காக செலவும் செய்து, பக்கங்களை பிரபலப் படுத்தியுள்ளனர். இவற்றில் முதல் விளம்பரம், ஆக.2014லும் கடைசியாக விளம்பரம் மார்ச் 2019லும் வெளியிடப் பட்டிருக்கிறது. இவை அனைத்துமே, இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப் பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் தலையிட்டுள்ளது என்றும் அதிபர் டிரம்ப் தேர்தலில் நின்ற போது, அவருக்கு ஆதரவான கட்டுரைகளை பேஸ்புக் மக்களிடம் அதிகம் கொண்டு சென்றது என்றும், இதற்கு பின் ரஷ்யா இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது பின்னர் நிரூபிக்கப்பட்டது!

ALSO READ:  ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

இந்நிலையில், பேஸ்புக் கடந்த வருடமே இதுகுறித்து முக்கிய விஷயம் ஒன்றை தெரிவித்திருந்தது. அதன்படி இனி எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் பேஸ்புக் கட்டுப்பாடுகளை விதிக்கும். பேஸ்புக்கில் முறையின்றி இயங்கும் கணக்குகள் முடக்கப்படும். தேர்தல் நேரத்தில் தவறான தகவல்களை பரப்பும் பொய்யான கணக்குகள், பக்கங்களை முடக்குவோம் என்றது பேஸ்புக் நிறுவனம்!

இந்நிலையில் இந்திய அரசும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சில கட்டுப் பாடுகளை விதித்தது. .அதன்படி, நடவடிக்கை எடுத்துள்ள பேஸ்புக், தேர்தலை முன்னிட்டு பல நூறு பேஸ்புக் கணக்குகளை முடக்கியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பான 687 பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பக்கங்கள் பல பொய்யான செய்திகளை பரப்பியதாகவும், தவறான போலி கணக்குகளை கொண்டு இருந்ததாகவும் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது! இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. அதேபோல் பாஜகவினர் தொடங்கிய சில பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

ஆனால், பெரும்பாலானவை குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸின் ஐடி., பிரிவு தொடங்கிய 687 கணக்குகள் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் என்பது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான பக்கங்கள் பாகிஸ்தானில் இருந்து தொடங்கப்பட்டு நடத்தப் பட்டவை. ஆனால் அவற்றின் விளம்பரத்துக்கான தொகைகள், இந்திய ரூபாயில் பேஸ்புக் நிறுவனத்துக்கு செலுத்தப் பட்டிருக்கின்றன என்பதும், பாகிஸ்தானியர் பெயர்களில் உள்ள சில பக்கங்களில், காங்கிரஸின் விளம்பரங்கள் ஓடியுள்ளன என்பதும் இந்திய தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

1 COMMENT

  1. இத்தாலிக்காரியும் அவரது மகனுமாகிய பாப்பு, மற்றும் அவர்களது கூட்டணியில் உள்ள தீயசக்திகளை காட்டிக்கொடுத்த முகநூலுக்கு நன்றி solvom.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories