தமிழகம் சென்ற காவிரியை தடுத்து நிறுத்தியவர் தேவகௌட! முதல்வர் குமாரசாமி ‘பளிச்’!

Dhin news kumarasamy - 2026

தமிழகத்திற்கு தாராளமாக சென்று கொண்டிருந்த காவிரி நீரை அணை போட்டுத் தடுத்து நிறுத்தியவர் தேவகௌட என அவரது மகனும் கர்நாடக முதல்வருமாகிய ஹெச்.டி. குமாரசாமி பளிச்செனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, ஹேமாவதி அணை நீரை தும்கூர் மாவட்டத்துக்கு திருப்பி விட முயற்சி செய்யாத தேவகௌடாவை தும்கூர் மக்கள் இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக சிலர் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்துக்கு தாராளமாக காவிரி நீரைத் தர முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா தயாராக இருந்தார்! அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தித்தான் ஹேமாவதி அணை கட்டப்பட்டது. தமிழகத்துக்கு தங்குதடையின்றி தாராளமாகச் சென்று கொண்டிருந்த தண்ணீரை தடுப்பதற்காகவே தேவகௌட போராடி ஹேமாவதி அணையைக் கட்டினார் என்று கூறினார்.

ஹேமாவதி அணை கட்டப் பட்ட போது, தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் திமுக., தலைவர் கருணாநிதி என்பதும், அவர் அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்காததாலேயே காவிரி நீர்ப் பிரச்னை பூதாகாரமாக தமிழகத்தில் உருவெடுத்தது என்றும் குற்றம் சாட்டப் பட்டு வருகிறது.

ஆனால், இப்போதும் அதனை எல்லாம் திசை திருப்பி விட்டு, திமுக., வேறு கதைகளைப் பேசி, காவிரிப் பிரச்னையை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதற்குக் காரணம், பாரதியின் பாடல்படி அமைந்த அடிப்படைக் காரணம்தான்… “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இவை என்ற அறிவுமிலார்…” !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories