தமிழகம் சென்ற காவிரியை தடுத்து நிறுத்தியவர் தேவகௌட! முதல்வர் குமாரசாமி ‘பளிச்’!

Dhin news kumarasamy - 2026

தமிழகத்திற்கு தாராளமாக சென்று கொண்டிருந்த காவிரி நீரை அணை போட்டுத் தடுத்து நிறுத்தியவர் தேவகௌட என அவரது மகனும் கர்நாடக முதல்வருமாகிய ஹெச்.டி. குமாரசாமி பளிச்செனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, ஹேமாவதி அணை நீரை தும்கூர் மாவட்டத்துக்கு திருப்பி விட முயற்சி செய்யாத தேவகௌடாவை தும்கூர் மக்கள் இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக சிலர் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்துக்கு தாராளமாக காவிரி நீரைத் தர முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா தயாராக இருந்தார்! அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தித்தான் ஹேமாவதி அணை கட்டப்பட்டது. தமிழகத்துக்கு தங்குதடையின்றி தாராளமாகச் சென்று கொண்டிருந்த தண்ணீரை தடுப்பதற்காகவே தேவகௌட போராடி ஹேமாவதி அணையைக் கட்டினார் என்று கூறினார்.

ஹேமாவதி அணை கட்டப் பட்ட போது, தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் திமுக., தலைவர் கருணாநிதி என்பதும், அவர் அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்காததாலேயே காவிரி நீர்ப் பிரச்னை பூதாகாரமாக தமிழகத்தில் உருவெடுத்தது என்றும் குற்றம் சாட்டப் பட்டு வருகிறது.

ஆனால், இப்போதும் அதனை எல்லாம் திசை திருப்பி விட்டு, திமுக., வேறு கதைகளைப் பேசி, காவிரிப் பிரச்னையை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதற்குக் காரணம், பாரதியின் பாடல்படி அமைந்த அடிப்படைக் காரணம்தான்… “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இவை என்ற அறிவுமிலார்…” !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories