December 5, 2025, 7:23 PM
26.7 C
Chennai

“பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்”

“பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்”26056052 1817618858283271 3930286687593664750 n - 2025
(இரண்டு சம்பவங்கள்)
 
(ரத்த அழுத்தம்,சர்க்கரைக்காரருக்கும் பைத்தியக்காரப் பையனுக்கும்-அருள் செய்தது)
 
சொன்னவர்-.மடம் பாலு
தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
.
 
சம்பவம்-1
 
மிகவும் பருமனான சரீரமுடைய ஒரு பக்தர்
பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.
ரத்த அழுத்தம்,சர்க்கரை,கொலஸ்ட்ரால் போன்ற
பல தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறினார்.
எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் உணவு அளவைக்
குறைத்தும் கூட கனம் குறையவில்லை என்றார்.
(இவர் நாட்டுக்கோட்டை செட்டியார்)
 
” நீ திருவண்ணாமலைக்குப் போய் ஒரு மண்டலம்
தங்கு. முடிந்த வரை கிரிபிரதட்சிணம் செய். நடக்க
முடியாத இடத்திலிருந்து கார்,ஆட்டோ எதிலாவது
போய் பிரதட்சிணத்தை முடிச்சுடு. என்ன?….
ஒரு கிலோ மீட்டர் நடந்து போ…அப்புறம் ஆட்டோ!…”
 
செட்டியார் அப்படியே செய்தார்.ஒரு வாரத்துக்குப் பின் உடல் எடை குறைய ஆரம்பித்தது. ஒரு மண்டலம் ஆனவுடன்,அநேகமாக ஓர் ஆண் உடல் அளவுக்கு வந்து விட்டார்.
 
மண்டலம் பூர்த்தியானதும் பெரியவாள்
தரிசனத்துக்கு வந்து, நமஸ்காரம் செய்தார்.
 
“சிரமமில்லாமல் நமஸ்காரம் செய்ய முடியறது
போலிருக்கே!” என்றார்கள் பெரியவாள்.
 
செட்டியார் புல்லரிக்க நின்றார்.
 
…………………………………………………………………………………………………
 
சம்பவம்-2
 
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி
தரிசனத்துக்குப் போனார்கள் பெரியவாள்.
 
புத்தி சரியில்லாத ஒரு பையனை சங்கிலியால்
கட்டிப் போட்டு, ஓர் ஆளுடன் சேர்த்து வெளிப் பிரகாரப் பிரதட்சிணம் செய்ய அனுப்பி வைத்தார்கள்.
 
பையன் முரண்டு பண்ணியதால், துணைக்கு வந்த ஆள் கழியால் அடித்து இம்சித்தான்.
 
பைத்தியக்காரப் பையன் படும் கஷ்டத்தைப்
பார்த்துப் பெரியவாளுக்கு இரக்கம் உண்டாயிற்று.
 
“கட்டுகளை அவிழ்த்து விடு. பையன் ஒண்ணும்
செய்யமாட்டான்…..” என்றார்கள்.
 
கட்டை அவிழ்த்து விட்டதும் பையன் நேரே
பெரியவாளிடம் வந்து நமஸ்காரம் செய்தான்.
“அவன் என்னுடன் வரட்டும்” என்றார்கள்,பெரியவாள்.
 
பையன் ஸ்ரீ மடத்திலேயே இருந்து வந்தான்.
சேஷ்டைகள்,தொல்லைகள் செய்வதில்லை.
 
சில நாட்களில் அவனுடைய பைத்தியம் தெளிந்தது.
ஸ்ரீமடத்தில் சின்னச்சின்ன வேலைகளை செய்து வந்தான்
 
பிறகு,அவன் பெற்றோரைக் கூப்பிட்டு அனுப்பி,
“இவனைப் பள்ளிக்கூடத்திலே சேர்த்து,படிக்க வை”
என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள்,பெரியவாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories