“பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்”

“பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்”26056052 1817618858283271 3930286687593664750 n - 2026
(இரண்டு சம்பவங்கள்)
 
(ரத்த அழுத்தம்,சர்க்கரைக்காரருக்கும் பைத்தியக்காரப் பையனுக்கும்-அருள் செய்தது)
 
சொன்னவர்-.மடம் பாலு
தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
.
 
சம்பவம்-1
 
மிகவும் பருமனான சரீரமுடைய ஒரு பக்தர்
பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.
ரத்த அழுத்தம்,சர்க்கரை,கொலஸ்ட்ரால் போன்ற
பல தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறினார்.
எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் உணவு அளவைக்
குறைத்தும் கூட கனம் குறையவில்லை என்றார்.
(இவர் நாட்டுக்கோட்டை செட்டியார்)
 
” நீ திருவண்ணாமலைக்குப் போய் ஒரு மண்டலம்
தங்கு. முடிந்த வரை கிரிபிரதட்சிணம் செய். நடக்க
முடியாத இடத்திலிருந்து கார்,ஆட்டோ எதிலாவது
போய் பிரதட்சிணத்தை முடிச்சுடு. என்ன?….
ஒரு கிலோ மீட்டர் நடந்து போ…அப்புறம் ஆட்டோ!…”
 
செட்டியார் அப்படியே செய்தார்.ஒரு வாரத்துக்குப் பின் உடல் எடை குறைய ஆரம்பித்தது. ஒரு மண்டலம் ஆனவுடன்,அநேகமாக ஓர் ஆண் உடல் அளவுக்கு வந்து விட்டார்.
 
மண்டலம் பூர்த்தியானதும் பெரியவாள்
தரிசனத்துக்கு வந்து, நமஸ்காரம் செய்தார்.
 
“சிரமமில்லாமல் நமஸ்காரம் செய்ய முடியறது
போலிருக்கே!” என்றார்கள் பெரியவாள்.
 
செட்டியார் புல்லரிக்க நின்றார்.
 
…………………………………………………………………………………………………
 
சம்பவம்-2
 
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி
தரிசனத்துக்குப் போனார்கள் பெரியவாள்.
 
புத்தி சரியில்லாத ஒரு பையனை சங்கிலியால்
கட்டிப் போட்டு, ஓர் ஆளுடன் சேர்த்து வெளிப் பிரகாரப் பிரதட்சிணம் செய்ய அனுப்பி வைத்தார்கள்.
 
பையன் முரண்டு பண்ணியதால், துணைக்கு வந்த ஆள் கழியால் அடித்து இம்சித்தான்.
 
பைத்தியக்காரப் பையன் படும் கஷ்டத்தைப்
பார்த்துப் பெரியவாளுக்கு இரக்கம் உண்டாயிற்று.
 
“கட்டுகளை அவிழ்த்து விடு. பையன் ஒண்ணும்
செய்யமாட்டான்…..” என்றார்கள்.
 
கட்டை அவிழ்த்து விட்டதும் பையன் நேரே
பெரியவாளிடம் வந்து நமஸ்காரம் செய்தான்.
“அவன் என்னுடன் வரட்டும்” என்றார்கள்,பெரியவாள்.
 
பையன் ஸ்ரீ மடத்திலேயே இருந்து வந்தான்.
சேஷ்டைகள்,தொல்லைகள் செய்வதில்லை.
 
சில நாட்களில் அவனுடைய பைத்தியம் தெளிந்தது.
ஸ்ரீமடத்தில் சின்னச்சின்ன வேலைகளை செய்து வந்தான்
 
பிறகு,அவன் பெற்றோரைக் கூப்பிட்டு அனுப்பி,
“இவனைப் பள்ளிக்கூடத்திலே சேர்த்து,படிக்க வை”
என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள்,பெரியவாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories